ரஜினிகாந்த் இதற்கெல்லாம் அஞ்சமாட்டார்: ஹெச்.ராஜா

ரஜினிகாந்த் அவர்கள் எந்த மிரட்டலுக்கும் சலசலப்புக்கும் அஞ்ச மாட்டார் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. பெரியார் குறித்தும் முரசொலி குறித்தும் அவர் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவதோடு ரஜினிகாந்த் மீது காவல்துறையினர்களிடம் புகாரும் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் கூறியபோது ’நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் மேலோட்டமாக ஒரே ஒரு சம்பவத்தை குறிப்பிட்டதற்காக திராவிட கழகத்தினர் மிரட்டுகிறார்கள். அதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது காவல் நிலையத்தில் பொய் பொய் புகார் கொடுத்தால் அது எடுபடாது. இதுபோன்ற ஊழை மிரட்டலுக்கு ரஜினிகாந்த் பயப்பட மாட்டார், அவர் எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டார் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். ரஜினிகாந்த் குறித்து ஹெச் ராஜா கூறிய இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் இடையே அவர் 'ஜனகணமன'

ஒரு டிரில்லியன் நிறுவனங்களில் பட்டியலில் கூகுள்

ஆப்பிள், அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே இதுவரை உலகில் ஒரு ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை பெற்றுள்ள நிலையில்

5 தேசிய விருதுகள் பெற்ற பிரபல நடிகை சென்ற கார் விபத்து!

ஐந்து முறை தேசிய விருது பெற்ற பிரபல பாலிவுட் நடிகை கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தது பாலிவுட் திரை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது 

'நீயா நானா' கோபிநாத் தந்தை மறைவு: திரையுலகினர் இரங்கல்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'நீயா நானா' என்ற நிகழ்ச்சியை கடந்த சில வருடங்களாக தொகுத்து வழங்கி வரும் கோபிநாத் தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்றவர் என்பது தெரிந்ததே.

'மாஸ்டர்' படப்பிடிப்பை பார்க்க வந்த பிரபலத்தின் தந்தை!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே.