மோகன்லாலின் 'வில்லன்' படத்தில் இணைந்த பிரபல தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Saturday,June 03 2017]

கேரள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உன்னிகிருஷ்ணன் இயக்கி வரும் திரைப்படம் 'வில்லன்'. இந்த படத்தில் மோகன்லால் முன்னாள் காவல்துறை அதிகாரி மாத்யூ மஞ்சூரன் கேரக்டரில் நடித்து வருகிறார். அவருடைய மனைவியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் விஷால் நடித்து வருகிறார் என்பது ஏற்கனவே தெரிந்ததே.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல தமிழ் நடிகை ஹன்சிகா தற்போது இணைந்துள்ளார். ஹன்சிகா நடிக்கும் முதல் மலையாள திரைப்படமான இந்த படத்தில் அவர் மிக முக்கிய கேரக்டரில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ராஷிகண்ணா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

கடந்த மே 31ஆம் தேதி இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இம்மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் வரும் ஜூலை 21ஆம் தேதி இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

தனது பட நாயகியை திருமணம் செய்த 60 வயது பிரபல இயக்குனர்

பிரபல இயக்குனர் வேலுபிரபாகரன் இன்று சென்னையில் உள்ள பிரிவியூ திரையரங்கில் தான் இயக்கிய 'ஒரு இயக்குனரின் காதல் கதை' பிரிவியூ காட்சியின் போது நடிகை ஷிர்லியுடன் திருமணம் செய்யவுள்ளதை அறிவித்தார்...

கஜோல் குடும்பத்தின் ஜாலியான வைட்டமின் F புகைப்படம்

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கஜோல், பாலிவுட்டில் பிசியாக நடித்து கொண்டிருந்தபோது கூட பிகினி உடையில் தோன்றியதில்லை...

கமல்ஹாசன் - தாணு இணையும் ரூ.400 கோடி பட்ஜெட் படம்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த 'ஆளவந்தான்' திரைப்படத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. இந்த படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தாலும் கமல்ஹாசனின் வித்தியாசமான முயற்சியை ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின...

பிரபல காமெடி நடிகருக்கு இரட்டை குழந்தை

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி மற்றும் குணசித்திர நடிகர்களில் ஒருவராகிய ஆடுகளம் முருகதாசுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்...

சினிமாவை விட்டு விலகவும் தயங்க மாட்டேன். கமல் அதிரடி பேச்சு

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில வருடங்களுக்கு முன் 'விஸ்வரூபம்' படத்தின் பிரச்சனையை சந்தித்தபோது, 'நாட்டை விட்டு வெளியேறுவேன்' என்று அதிரடியாக அறிவித்தார். இந்த நிலையில் இன்று 'சினிமாவை விட்டு விலகவும் தயங்க மாட்டேன்' என்று அதிரடியாக அறிவித்துள்ளார்...