சிம்புவுக்கு ஹன்சிகா அனுப்பிய மெசேஜ்!

  • IndiaGlitz, [Saturday,October 31 2020]

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்று ’மஹா’ என்பதும் இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் ஹன்சிகாவுக்கு இது ஐம்பதாவது படம் என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. சமீபத்தில் மத்திய, மாநில அரசுகள் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதை அடுத்து மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து, அதனை கேக் வெட்டி கொண்டாடினார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தனது 50-வது திரைப்படமான ’மஹா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள ஹன்சிகா, இந்த படம் சிறந்த படமாக இருந்தது என்றும் இந்த பயணத்தில் என்னுடன் பயணம் செய்த அனைவருக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள சிம்புவுக்கு மிகப்பெரிய நன்றி என்றும் பதிவு செய்துள்ளார். ஹன்சிகாவின் இந்த பதிவை சிம்பு ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது யார்? பரபரப்பு தகவல்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம்.

சீட்டுக் கட்டுப்போல சரிந்து விழுந்த கட்டிங்கள்… ஒரே நாளில் 196 முறை நில அதிர்வு.. காண சகிக்காத நிகழ்வு!!!

துருக்கியில் நேற்று அதிபயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது 7.0 ரிக்டர் அளவாகக்  கணிக்கப்பட்ட

இணையத்தில் வைரலாகும் வெங்கட்பிரபு மகளின் பாடல்!

இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் பேத்தியும், வெங்கட்பிரபுவின் மகளுமான ஷிவானி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பள்ளியில் தற்போது பயின்று வருகிறார்

கப்பலையே தாக்கி அழிக்கும் ஏவுகணை… இந்தியக் கடற்படையின் புது அசத்தல்!!!

வங்கக் கடல் பகுதியில் கப்பலைத் தாக்கி அழிக்கும் புது ஏவுகணையை இந்தியக் கடற்படை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது.

ஒரு கிலோ டீ தூள் விலை ரூ.75,000… தலைச் சுற்ற வைக்கும் தகவல்!!!

அசாம் மாநிலத்தின் குவஹாத்தி பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் விளைந்த சிறப்பு தேயிலை (டீ) தூள் ஒரு கிலோ ரூ.75 ஆயிரத்திற்கு விற்பனை ஆகி இருக்கிறது.