close
Choose your channels

மீண்டும் ஒரு திகில் படத்தில் கமிட் ஆன ஹன்சிகா!

Thursday, May 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அரண்மனை, அரண்மனை 2 ஆகிய திகில் படங்களில் நடித்த நடிகை ஹன்சிகா தற்போது அவரது 50வது படமான 'மஹா' என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு திகில் படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை பிரபுதேவா, ஹன்சிகா நடித்த 'குலேபகாவலி' திரைப்படத்தை இயக்கிய கல்யாண் இயக்கவுள்ளார். பிளாக் காமெடி மற்றும் திகில் படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் ஹன்சிகா வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பும் ஒரு நவநாகரீக பெண் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், இதுவரை இல்லாத அளவில் இந்த படத்தில் அவருடைய லுக் இருக்கும் என்றும் இயக்குனர் கல்யாண் கூறியுள்ளார்.

காசிப் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஜய்வேலுக்குட்டி என்பவர் படத்தொகுப்பாளராக பணிபுரியவுள்ளார். இந்த படத்தில் பணிபுரியும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் வரும் ஜூன் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூர் போன்ற பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.