close
Choose your channels

ஆட்டத்தைத் துவங்கிவிட்ட மெண்டர் தோனி… பிளேயிங் 11-இல் மாற்றமா?

Friday, October 29, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிளேயிங் 11-இல் இருந்து ஹர்திக் பாண்டியாவை தூக்கிவிட்டு அவருக்குப் பதிலாக ஷல்துல் தாக்கூரை சேர்க்க வேண்டும் என்ற குரல் வலுத்துவந்தது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக பந்து வீச்சில் ஈடுபடாமல் இருந்த பாண்டியா தற்போது திடீரென்று பந்துவீச்சில் ஈடுபட்டு வருகிறார். மேலும் பிளேயிங்-11னிலும் தொடர்கிறார். இதற்கு மெண்டர் தோனியே காரணம் என கிரிக்கெட் வட்டாரம் பரபரப்பு தகவலை கூறியிருக்கிறது.

இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக இருந்துவரும் ஹர்திக் பாண்டியா தோள்பட்டை காயம் காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறுவைசிகிச்சை செய்துகொண்டார். அதற்குப்பின்பு பந்துவீச்சில் ஈடுபடாமலே இருந்துவந்தார். தற்போது நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியக் கிரிகெட் அணிக்கு 6 ஆவது பவுலர் வேண்டும் என்ற கோரிக்கை முற்றியிருக்கிறது.

காரணம் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய பவுலர்கள் ஒரு விக்கெட்டைக் கூட எடுக்க முடியாமல் திணறினர். இன்னொருபக்கம் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் பாகிஸ்தான் 151 ரன்களை அடித்து அபார வெற்றிப்பெற்றது. இதனால் இந்திய பவுலிங் கடும் விமர்சனத்திற்கு ஆளானது.

இதையடுத்து பிளேயிங் 11 –இல் 6 ஆவது பவுலர் வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இந்நிலையில் தோனி, ஹர்திக் பாண்டியாவிடம் பவுலிங் செய்யச் சொன்னதால் அவர் அறிவுரையை ஏற்றுக்கொண்ட ஹர்திக் பாண்டியா உடனடியாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு தொடர்ந்து 15 நிமிடங்கள் அசராமல் பந்துவீச்சில் ஈடுபட்டு உள்ளார். இதையடுத்து ஹர்திக் பாண்டியா அணியில் தொடர்ந்து பந்துவீசுவார் என்றும் அவர் நல்ல உடல்தகுதியுடன் இருப்பதாகவும் அணி நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.

இதற்கு முன்பு ஹர்திக் பாண்டியாவை நீக்கிவிடலாம் என அணி நிர்வாகம் கூறியபோது “அவர் நல்ல பினிஷர், அணிக்கு அவர் தேவை“ என்று தோனியே சர்டிபிக்கேட் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.