அவரு என் அண்ணன்… மெண்டர் தோனியின் வருகையைக் கொண்டாடும் இளம் வீரர்!

டி20 உலகக்கோப்பையில் கலந்துகொள்ளும் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு மெண்ட்ராக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் இணைந்திருப்பது குறித்து ரசிகர்கள் ஆரவாரம் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களைப் போல இந்தியக் கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியாவும் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.

மும்பை அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவரும் ஹர்திக் பாண்டியா இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மற்றும் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு எம்.எஸ்.தோனி தலைமையில் இந்தியக் கிரிக்கெட் அணிக்குள் நுழைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு ஹர்திக் பாண்டியாவிற்கு மிகவும் நெருக்கமானவரும் கூட.

தற்போது தோனியின் வருகையை ஹர்திக் பாண்டியா கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார். அதுகுறித்து கருத்துப் பகிர்ந்து கொண்ட ஹர்திக் பாண்டியா, “ஆரம்பத்தில் இருந்தே என்னை நன்றாக புரிந்துகொண்டவர் மாஹி பாய். அவரை நான் எப்போதும் பேட்ஸ்மேனாக பார்த்தது இல்லை. பல வழிகளில் அவர்தான் எனக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுத்து இருக்கிறார். எனக்கு ஒரு சிக்கல் என்றால் முதல் ஆளாக வந்துநிற்பதும் அவர்தான். அவருடன் பழகினால் தானாகவே மெர்ச்சூரிட்டி வந்துவிடும். அந்த அளவிற்கு தன்னிலையை இழக்காதவர்.

அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்து கிரிக்கெட் சீரிஸ்க்கு நான் விளையாடச் சென்றபோது எனக்கு ஹோட்டல் அறை ஒதுக்கப்படவில்லை. அப்போது திடீரென்று ஒரு போன் கால். என்னுடைய அறைக்கு வா… நான் மெத்தையில் தூங்க மாட்டேன். நான் தரையில் படுத்துக்கொள்கிறேன். நீ மெத்தையில் தூங்கு” என்று பாசத்தோடு என்னை அழைத்தார்“ என்று தெரிவித்துள்ளார்.

மெண்டராக பொறுப்பேற்றுள்ள மகேந்திர சிங் தோனியின் வரவை பார்த்து ஹர்திக் பாண்டியா பகிர்ந்து கொண்ட இந்த நெகிழ்ச்சியான கருத்துக்கள் தற்போது சோஷியல் மிடியாவில் வைரலாகி வருகின்றன. மேலும் ஹர்திக் பாண்டியாவிற்கும் மாஹி பாய்க்கும் உள்ள இந்த உறவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More News

சூர்யா ரிலீஸ் செய்த பிக்பாஸ் டைட்டில் வின்னர் அறிமுகமாகும் படத்தின் டீசர்!

பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் நடித்த முதல் திரைப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள நிலையில் இந்த டீசர் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி இதுவா?

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'எதற்கும் துணிந்தவன்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

கோவில் கோவிலாக சுற்றும் விக்னேஷ்-நயன்: வைரல் புகைப்படங்கள்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியான நிலையில் இருவரும் தற்போது வட இந்திய கோவில்களுக்கு

வைல்ட்கார்ட் எண்ட்ரியாக செல்கிறாரா பிரபல தயாரிப்பாளர்? கண்டெண்டுக்கு பஞ்சமிருக்காது!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக் மற்ற போட்டியாளர்களை விட டாமினேட் செய்து தனது கருத்தை அனைவரும்

விஜய்சேதுபதியை சந்தித்தது மிகவும் மிகழ்ச்சி: பிரபல நடிகர் பகிர்ந்த புகைப்படம் வைரல்

தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை சந்தித்தது குறித்து தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்