சினிமாவில் அறிமுகமாகும் 'கோல்ட்மேன்': ஜோடியாகும் பிக்பாஸ் வனிதா!

  • IndiaGlitz, [Saturday,February 27 2021]

நடமாடும் ’கோல்ட்மேன்’ என்று கூறப்படும் ஹரி நாடார் அவர்கள் நடிகராக அறிமுகமாக இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக வனிதா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

ஹரி நாடார் என்பவர் தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் '2K அழகானது காதல்’. இந்த படத்தை முத்தமிழ் வர்மா என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த பூஜையில் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர்

இந்த படத்தை முத்தமிழ் வர்மா என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நாயகியாக வனிதா நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது

இந்த படத்தில் நடிப்பது குறித்து ஹரிநாடார் கூறியபோது, ‘இந்த படத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் முத்தமிழ் வர்மா அவர்கள் கதையைக் கூறினார். இந்த படத்தின் கதைப்படி நீங்கள் நடித்தால்தான் இந்த கதை இன்றைய தலைமுறைக்கு சென்று சேரும் என்றும் அவர் என்னிடம் கூறினார். எனவே நான் இந்த கதையை கேட்டு எனக்கு கதை பிடித்துப் போனதால் நான் நடிப்பதற்கு சம்மதத்தோடு மட்டுமல்லாமல் இந்த படத்தை தயாரிப்பதற்கும் நான் முன் வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
 

More News

சீமான் கூட முதல்வர் ஆகலாம்? நடிகர் சிங்கமுத்துவின் பிரத்யேக பேட்டி!

தமிழகச் சட்டச்சபை தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழக அரசியல் களத்தைப் பற்றியும்

ரஜினியின் நண்பர் அர்ஜூனா மூர்த்தியின் புதிய கட்சி அறிவிப்பு! கமலுடன் கூட்டணியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்க இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில் அவரது கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா மூர்த்தி என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.

கமல்ஹாசன் கட்சியில் இணைந்த பழம்பெரும் அரசியல்வாதி!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பழம்பெரும் அரசியல்வாதியும் விஜய்யின் 'சர்கார்' படத்தில் நடித்த பழ கருப்பையா அவர்கள் இணைந்துள்ளார்.

அதிரடி அறிவிப்புகளின் மூலம் ஏழை, எளிய மக்களின் துயர் துடைத்த தமிழக முதல்வர்!

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் நடிவடிக்கையாக,

அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தின் திடீர் பெயர் மாற்றம்? கிண்டல் அடித்த 2 பிரபலங்கள்!

அகமதாபாத்தில் உள்ள மோதேரா கிரிக்கெட் மைதானத்தை மத்திய அரசு உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக மாற்றி உள்ளது.