வந்துவிட்டது... 2020 இன் அடுத்த வைரஸ் பெருந்தொற்று!!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!!

  • IndiaGlitz, [Monday,July 06 2020]

 

கொரோனா, ஸ்வைன் ஃப்ளூவை தொடர்ந்து 24 மணி நேரத்தில் மனிதர்களைக் கொல்லக்கூடிய மற்றொரு நோய்த்தொற்று சீனாவில் பரவி வருவதாகத் தற்போது பரபரப்பு செய்தி வெளியாகி இருக்கிறது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகையே தலை கீழாகப் புரட்டி போட்டு இருக்கிறது. அதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனாவின் பெரும்பாலான மாகணங்களில் பன்றிகளிடம் புதிய வகை வைரஸ் ஒன்று பரவி வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்த விஞ்ஞானிகள் ஏற்கனவே புழகத்தில் இருக்கும் ஸ்வைன் ஃப்ளூ வைரஸ்தான் தற்போது பன்றிகளிடம் நோய்த்தொற்றை ஏற்படுத்தி வருகிறது. இது மனிதர்களுக்குப் பரவும் தன்மைக் கொண்டது. கொரோனாவை போல மனிதர்களுக்கு மற்றொரு தலைவலியாக இது இருக்கும் எனவும் எச்சரித்து இருந்தனர்.

அதையடுத்து சீனாவில் புபோனிக் பிளேக் என்ற மற்றொரு நோய்த்தொற்று பரவி வருவதாக அந்நாட்டின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. மங்கோலிய சுயாட்சி பகுதியில் உள்ள பயனூர் மருத்துவமனையில் இந்த பிளேக் நோய் ஏற்கனவே பரவி விட்டதாகவும் இதனால் 2 பேர் உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அப்பகுதியில் மூன்றாம் நிலை நோய்த்தொற்று பரவல் எச்சரிக்கை விடுக்கப் பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மனிதர்களுக்கு மிக விரைவிலேயே நோய்த்தொற்றை ஏற்பட்டுத்தும் இந்த வைரஸ் குறைந்தது 24 மணி நேரத்திலேயே மனிதர்களை கொல்லும் தன்மைக் கொண்டது எனவும் உலகச் சுகாதார மையம் எச்சரிக்கை செய்கிறது.

தற்போது பரவிவரும் புபோனிக் பிளேக் நோய்த்தொற்று உணவுகளைக் கொறிக்கும் தன்மைக் கொண்ட மர்மூத் என்னும் விலங்கினத்தின் மூலம் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. மலைகளில் வாழும் எலி, அணில் இனத்தைச் சார்ந்த மர்மூத் விலங்குகளின் இறைச்சியை உண்டதால் இந்நோய்த்தொற்று மனிதர்களை தாக்கி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எனவே சீனாவில் கொறிக்கும் தன்மைக்கொண்ட விலங்குகளின் இறைச்சிகளை உட்கொள்ள வேண்டாம் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் வௌவால்களில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் தன்மைக் கொண்டது எனவும் மேலும் அது எறும்பு திண்ணிகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவியதகாவும் விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். அதைத்தொடர்ந்து மர்மூத் இனங்களும் நோய்த்தொற்று பட்டியலில் சேர்ந்து கொண்டு இருக்கின்றன.

More News

லண்டன் To கொல்கத்தாவுக்கு பஸ்ஸில டிராவலா??? தலைச் சுற்ற வைக்கும் ஆச்சர்யத் தகவல்!!!

சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக ஒரு பரபரப்பு தகவல் பகிரப்பட்டு வருகிறது.

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம், 2 ஆண்டுகள் சிறை: அதிரடி அறிவிப்பு

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸின் பாதிப்பு மிகவும் குறைந்து கொண்டே வந்ததால் மிக விரைவில் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக கேரளா மாறும்

கொரனோ தடுப்பு மருந்து: ஒரு சில மணி நேரங்களில் அறிக்கையை வாபஸ் பெற்ற அமைச்சகம் 

கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்து 2021 ஆம் ஆண்டுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பில்லை என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருந்த

மக்களுக்கு ரொம்ப நல்லது பண்றீங்க: ரஜினியின் பாராட்டை பெற்ற டாக்டர்

கொரோனா வைரஸ்க்கு இன்னும் தடுப்பு மருந்து மற்றும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை எனினும் அலோபதி மற்றும் சித்தா ஆகிய இரண்டு முறைகளிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

விமான நிலையத்தில் குட்டித்தூக்கம்: ஃபிளைட்டை மிஸ் செய்த இந்தியரால் துபாயில் பரபரப்பு

துபாயில் இருந்து இந்தியா திரும்ப விமான நிலையத்தில் காத்திருந்த இந்தியர் ஒருவர் ஒரு குட்டி தூக்கம் போட்டதால் விமானத்தை தவற விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது