ரஜினிக்கு அரசியலைவிட உடல்நலம் ரொம்ப முக்கியம்: கமல்ஹாசன்

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினி குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘ரஜினிக்கு அரசியலை விட உடல்நலம் ரொம்ப முக்கியம் என்றும், அரசியல் பற்றி ரஜினி தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியுடன் பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம் என்றும், சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினியின் ஆதரவை கேட்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டசபையில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களின் குரல் கண்டிப்பாக கேட்கும் என்றும், நானும் கண்டிப்பாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும், எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது வேட்புமனு தாக்கலின்போது தெரியும் என்றும் கூறினார்.

மேலும் நல்லவர்களுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும் என்றும் நல்லவர்கள் மூன்றாவது அணி வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். நேர்மை ஒன்றே மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் வியூகம் என்றும், நேர்மையானவர்கள் என பிற கட்சியினர் கூற முடியுமா? என்றும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.

More News

விபிஎப் கட்டணத்தை ஏற்கிறோம், ஆனால் ஒரு நிபந்தனை: திரையரங்கு உரிமையாளர்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளதால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மட்டுமின்றி

அது என் குழந்தை இல்லை: வளைகாப்பு நிகழ்ச்சியில் மனைவியின் கள்ளக்காதலை அம்பலப்படுத்திய கணவர்!

மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியின்போது தனது மனைவியின் வயிற்றில் இருப்பது தன்னுடைய குழந்தை இல்லை என்றும் அது கள்ளக்காதலால் உருவான குழந்தை என்றும் கணவர்

இந்தியச் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 3 வயது சிறுமி!

22 இந்திய மொழிகளின் பெயர்களை குறைந்த வேகத்தில் உச்சரித்து 3 வயது சிறுமி, மத்திய அரசின் இந்தியச் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.

காட்டு யானையைச் சுட்டுக் கொன்ற விவசாயி… வனத்துறையினரால் கைது!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை அருகே வனத்துறையை ஒட்டிய பகுதியில் 12 வயது பெண் யானை ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

ஃபிளையிங் கிஸ் கொடுத்த ஷிவானி: ஹேப்பி மூடில் ஹவுஸ்மேட்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாகவே டாஸ்குகள் மூலம் சண்டை சச்சரவு மற்றும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகிறது என்பதும். இதனால் பிக்பாஸ் வீடு ஒரே கலவர பூமியாக இருக்கிறது