close
Choose your channels

சென்னைக்கும் இன்னும் கனமழை காத்திருக்கு: வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்!

Sunday, November 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டு உள்ளதால் வட மாவட்டங்களில் வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சென்னைக்கு மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும் வட தமிழகத்தில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால் சென்னையில் மேலும் அதிகனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழகக் கடற்கரையின் தெற்கு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் நவம்பர் 9ஆம் தேதி முதல் அதாவது நாளை மறுநாள் முதல் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதன் பின்னர் வலுப்பெற்று வடக்கு கடற்கரை நோக்கி நகரும் என்றும் இதன் காரணமாக நவம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையை பொருத்தவரை அடுத்த சில மணி நேரத்தில் கன மழையும் சில இடங்களில் அதிக கனமழையும் பெய்யும் என்றும் வானிலை மைய துணை இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.