close
Choose your channels

கேரளாவில் வரலாறு காணாத கனமழை: வெள்ளம், நிலச்சரிவால் 20 பேர் பலி

Thursday, August 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேரள மாநிலத்தில் பெய்துவரும் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 20 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் அம்மாநிலத்தில் உள்ள 22 அணைகளும் கொள்ளளவை எட்டியதால் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாகவே தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் கேரள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இடுக்கி மாவட்டத்தில் மட்டும் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் இறந்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. மேலும் இடுக்கி அணையின் முழு கொள்ளளவான 2,403 அடியை நெருங்க இன்னும் ஒருசில அடிகளே இருப்பதால் அந்த அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த அணையில் இருந்து தண்ணீர் 26 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் திறந்துவிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளப்பெருக்கு காரணமாக கொச்சி சர்வதேச விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கனவெள்ளம் மற்றும் நிலச்சரிவை முன்னிட்டு கேரளாவில் உள்ள கொல்லம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது,.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.