close
Choose your channels

சென்னையில் 5 நாட்கள் மிக பலத்த மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

Thursday, November 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது என்பதும் அதன் காரணமாக சென்னையை சுற்றியுள்ள அனைத்து நீர்நிலைகளும் முழு கொள்ளளவை எட்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட ஒருசில நீர்நிலைகளில் இருந்து உபரி நீர் அதிக அளவு திறந்து விடப்பட்டதால் சென்னை சில நாட்கள் வெள்ளத்தில் மிதந்தது என்பதும் இதனால் தாழ்வான பகுதியில் இருந்த பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் தோன்றியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக நவம்பர் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் சென்னையில் மிக பலத்த மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னையில் நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு இரவில் இருந்து அதிகாலை வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் சில நாட்களில் பகலிலும் பலத்த மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே சென்னை மக்கள் மீண்டும் ஒரு பலத்த மழையை சந்திக்க தயாராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.