போரூர் பாலத்திற்கு திறப்புவிழா நடத்திய பொதுமக்கள்! மீண்டும் மூடிய போலீசார்

  • IndiaGlitz, [Wednesday,June 21 2017]

சென்னையின் மிக நெருக்கடியான போக்குவரத்து பகுதிகளில் ஒன்று போரூர் சிக்னல். சென்னை வடபழனி, குன்றத்தூர், பூந்தமல்லி, கிண்டி ஆகிய முக்கியப் பகுதிகளை இணைக்கும் போரூர் ரவுண்டானா வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்வதால் இந்த பகுதியில் எந்த நேரமும் நெருக்கடி ஏற்பட்டே இருக்கும்
இந்த நிலையில் இங்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில், இருபுறமும் தலா 7.5 மீட்டரில் சர்வீஸ் சாலையுடன், 480 மீட்டர் நீளம், 37.2 மீட்டர் அகலத்துக்கு ரூ.34.72 கோடியில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. சென்னைப் பெருநகர நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 2010 பிப்ரவரியில் பாலம் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் இந்த பணி நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் 2015ஆம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த பாலங்களின் பணி முழுமையாக முடிவடைந்தும் அரசு இன்னும் முறைப்படி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னை பெய்த மழை காரணமாக போரூர் ரவுண்டானா பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் பாலத்தில் வைத்திருந்த தடுப்பினை அகற்றி தாங்களாகவே திறப்பு விழா நடத்தினர். இதனால் ஒருசில நிமிடங்களில் போக்குவரத்து நெருக்கடி சீரானது. ஆனால் பொதுமக்களே பாலத்தை திறந்தது குறித்த தகவல் அறிந்தவுடன் அங்கு வந்த போலீசார் மீண்டும் தடுப்புகளை அமைத்து பாலத்தை மீண்டும் மூடினர். அதன்பிறகு பாலத்தில் வாகனங்கள் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் இந்த பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முறைப்படி காலதாமதம் இன்றி திறந்து வைக்க வேண்டும் என்றும் அரசு மேலும் காலம் தாழ்த்தினால் மீண்டும் பொதுமக்களே திறந்து வைத்து பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக அந்த பகுதி மக்கள் கருத்து கூறினர்.

More News

இவர்தான் 'மெர்சல்' டிசைனுக்கு சொந்தக்காரர்

இளையதளபதி விஜய்யின் 61வது படமான 'மெர்சல்' டைட்டில் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வரும் நிலையில் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை டிசைன் செய்த டிசைனருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

'மெர்சல்' முதல் பார்வையில் இதை யாராவது கவனித்தீர்களா?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் டைட்டில் 'மெர்சல்' என்பதையும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் சற்று முன் பார்த்தோம்.

இளையதளபதியின் 'தளபதி 61' படத்தின் அட்டகாசமான தலைப்பு

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் டைட்டில் 'மூன்று முகம்' உள்பட பல டைட்டில்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'திருட்டுப்பயலே 2' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜீவன், மாளவிகா, சோனியா அகர்வால், அப்பாஸ் நடிப்பில் சுசிகணேசன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான 'திருட்டுப்பயலே' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து 11 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் 2ஆம் பாகம் தயாராகி வருகிறது.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு?

மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்றும் பொதுமக்கள் தங்கள் கையில் உள்ள செல்லாத நோட்டுக்களை 2017 மார்ச் 30ஆம் தேதிக்குள் வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது...