close
Choose your channels

பிபிஈ உடையணிந்து நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள்!

Tuesday, July 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு பிபிஈ உடை வழங்குவது வழக்கமாக உள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவர்களை பாதுகாக்க இந்த உடை பெரிதும் உதவியாக இருக்கும்

இந்த நிலையில் கிட்டத்தட்ட இந்த பிபிஈ உடை போன்ற உடையை அணிந்து பிரபல நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் குறித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நகைக்கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

காவல் துறையினர் விரைந்து வந்து நகைக்கடையை சோதனை செய்தனர். அதன் பின் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் போல் பிபிஈ உடை அணிந்து கொள்ளையர்கள் கொள்ளையடித்த காட்சி அதில் இருந்தது. தலையில் தொப்பி, முகத்தில் மாஸ்க், பிளாஸ்டிக் ஜாக்கெட்டுகள் மற்றும் கையுறைகள் ஆகியவற்றை அணிந்து கொள்ளையர்கள் ஷோகேசில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்ற காட்சியை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த நகைக்கடையில் கொள்ளை போன நகைகளின் மதிப்பு 780 கிராம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நகைக் கடைக்காரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பிபிஈ உடை அணிந்து கொள்ளையடித்த கொள்ளையர்களால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.