close
Choose your channels

சதுரங்க வேட்டை' நாயகி மாயமானது ஏன்? புதிய தகவல்கள்

Wednesday, June 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'சதுரங்க வேட்டை' படத்தில் நடித்த நடிகை இஷாரா, தற்போது 'எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்றும், படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இரண்டு நாட்கள் மட்டுமே நடித்துவிட்டு திடீரென அவர் மாயமாகிவிட்டதாகவும் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து இஷாரா தற்போது பேட்டி ஒன்றின் மூலம் விளக்கியுள்ளார்.
'எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா' என்ற படத்திற்காக நான் ஆறு மாதங்கள் கால்ஷீட் கொடுத்தது உண்மைதான். ஆனால் இயக்குனர் கெவின் ஜோசப் இந்த நான்கு மாதங்களில் ஒருசில நாட்கள் மட்டுமே என்னை வைத்து படமாக்கினார். மேலும் படப்பிடிப்பின்போது என்னிடம் அவர் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார். என்னை கூப்பிடும்போது பலர் முன்னிலையில் 'வாடி', 'போடி' என்று கூப்பிட்டதால் எனக்கு அவமானமாக இருந்தது.
மேலும் படப்பிடிப்பின்போது இயக்குனர் என்னை தொட்டு தொட்டு பேசுவதும், தகாத வார்த்தைகளை உபயோகிப்பதையும் என்னால் பொறுத்துகொள்ள முடியவில்லை. இந்த படத்தின் ஒரு காட்சியில் நான் ஓடிக்கொண்டிருக்க இயக்குனர் என்னை காரில் துரத்துவது போன்ற ஒரு காட்சி உள்ளது. இந்த காட்சியின் படப்பிடிப்பின்போது இயக்குனர் வந்த கார் என் மீது மோதியதால் நான் கீழே விழுந்துவிட்டேன். உண்மையிலேயே காரில் பிரேக் பிடிக்கவில்லையா? இல்லை அவர் வேண்டுமென்றே என் மீது மோதினாரா என்பது எனக்கு தெரியவில்லை.
என்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தி இயக்குனர் படத்திற்கு விளம்பரம் தேடி வருகின்றார். இந்த பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்பதாலும் என்னுடைய மற்ற படங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதாலும் நான் இதுகுறித்து நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கவில்லை' என்று கூறினார்.
இதுகுறித்து இயக்குனர் கெவின் கூறியபோது, 'நான் இஷாராவிடம் நாகரீகமற்ற முறையில் நடந்து கொள்ளவில்லை. அந்த கார் காட்சியின்போது உண்மையிலேயே பிரேக் பிடிக்கவில்லை. ஒருவேளை அவருக்கு பாதுகாப்பு தேவை என்றால் தாராளமாக அவரது குடும்பத்தினர்களை படப்பிடிப்பின்போது உடன் வைத்துக்கொள்ளலாம். நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். படப்பிடிப்புக்கு அவர் தொடர்ந்து வந்து படத்தை முடித்து தரவேண்டும்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.