விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் பட நாயகி குறித்த தகவல்

  • IndiaGlitz, [Sunday,July 16 2017]

தளபதி விஜய் 'மெர்சல்' படத்தை அடுத்து பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை எனினும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு பின்னர் மீண்டும் இணையும் இந்த கூட்டணியின் படத்தின் நாயகி யாராக இருக்கும் என்பதே பலரது கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக ராகுல் ப்ரித்திசிங் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ராகுல் ப்ரித்திசிங் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'ஸ்பைடர்' படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. 'ஸ்பைடர்' படத்தில் அவருடைய அபார நடிப்பை பார்த்துதான் மீண்டும் அவரை தனது அடுத்த படத்தின் நாயகியாக்க முருகதாஸ் முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. முருகதாசின் இந்த முயற்சியால் ஸ்பைடர் படம் விஜய் 62 படத்துடன் கனெக்சன் ஆகியுள்ளது.

More News

கமல்ஹாசன் மீது வன்கொடுமை சட்டம்: அமைச்சர் சி.வி.சண்முகம் 

உலக நாயகன் கமல்ஹாசன் தமிழக அரசை கடந்த சில மாதங்களாகவே கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால் அமைச்சர்களும் அவ்வப்போது கமல்ஹாசன் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு அமைச்சர் கமல்ஹாசனை ஒருமையில் பேசிய சம்பவமும் நடந்தது.

கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு'வுக்கு என்ன ஆச்சு?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவில் நடைபெற்றது. அதன் பின்னர் ஒருவருடத்திற்கு மேல் ஆகியும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறாததால் இந்த படம் கைவிடப்பட்டதா? என்ற சந்தேகம் பலருக்கு எழுந்தது

ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு: விஜய்சேதுபதிக்கு ஜல்லிக்கட்டு பேரவைச் செயலாளர் நோட்டீஸ்

சினிமா பிரபலங்கள் மீது குற்றச்சாட்டு கூறி நோட்டீஸ் அனுப்புவது கடந்த சில காலமாகவே ஃபேஷனாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கமல்ஹாசனுக்கு மலையாள நடிகை விவகாரத்தில் மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் நேற்று பிரபல நடிகர் விஜய்சேதுபதிக்கு ஜல்லிக்கட்டு பேரவைச் செயலாளர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அபிராமி தியேட்டரில் புதிய முயற்சி: மற்ற திரையரங்குகளும் பின்பற்றுமா?

கடந்த 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி காரணமாக திரையரங்குகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. ரூ.120 ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.150க்கும் மேல் உள்ளது.

நரமாமிச அகோரிகளால் தி.நகர் திருப்பதி கோவிலில் தீட்டா?

சென்னையின் திருப்பதி என்று அழைக்கப்படும் சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி வழிபாடு செய்வது வழக்கம்.