புளூவேல் கேம்: தானாக முன்வந்து விசாரணையை தொடங்கிய ஐகோர்ட்

  • IndiaGlitz, [Friday,September 01 2017]

உலகையே ஆட்டிப்படைத்து வரும் புளுவேல் கேமினால் தற்கொலை செய்துவரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த விளையாட்டை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் ஆட்சியை காப்பாற்றவே அரசியல்வாதிகளுக்கு நேரம் இல்லாதபோது மக்களின் பிரச்சனைகளை கவனிக்க அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கும். இந்த நிலையில் மதுரை ஐகோர்ட் புளூவேல் கேம் குறித்து தாமாக முன்வந்து விசாரணை செய்ய முன்வந்துள்ளது. இந்த வழக்கு குறித்த விசாரணை வரும் 4ஆம் தேதி நடைபெறும் என தெரிகிறது.

இந்த நிலையில் கோவையில் புளூவேல் விளையாட்டால் கையை அறுத்துக்கொண்ட 10-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு காவல்துறையினர் கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர். நேற்று மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்னொரு உயிர் இழப்பு ஏற்படுவதற்குள் இந்த கேம் தடை செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

More News

வெளியானது விஷாலின் அடுத்த படத்தின் டிரைலர்

நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்க பணிகள், தங்கையின் திருமணம் ஆகியவற்றின் பிசியிலும் விஷால் தற்போது 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மோகன்லால் நடித்து வரும் 'வில்லன்' என்ற மலையாள படத்தில் விஷால் முதல்முறையாக வில்லனாக நடித்து வருகிறார்...

'பிக் ஸ்டார்' ஓவியாவின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்

பிக்பாஸ் வீட்டில் ஒரே ஒரு மாதம் மட்டுமே இருந்த ஓவியா, இன்று உலகப்புகழ் பெற்றுவிட்டார். மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல விரும்பவில்லை என்று கூறிய ஓவியா, திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்...

சட்டையை மாற்றினாலும் பாம்பு பாம்புதான்: ஜூலி குறித்து ஆர்த்தி

பிக்பாஸ் பார்வையாளர்களால் அதிகளவு வெறுக்கப்பட்ட ஜூலி மீண்டும் ரீஎண்ட்ரி ஆனது ஏற்கனவே தள்ளாடி கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியை குழிதோண்டி புதைக்கும் வகையில் உள்ளது...

பெனாசிர் பூட்டோ வழக்கில் திடீர் திருப்பம்: பர்வேஸ் முஷரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்...

நீங்கள்தான் எங்கள் நிரந்தர கேப்டன்: தோனிக்கு விராத் புகழாரம்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடந்த 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி இந்திய அணியின் அபார வெற்றி மட்டுமின்றி மேலும் ஒரு சிறப்பை பெற்றுள்ளது...