close
Choose your channels

மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Tuesday, September 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவி வளர்மதி கடந்த மாதம் கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ததால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனால் முதலாமாண்டு படிக்கும் இந்த மாணவி கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். குண்டர் சட்டத்தில் இருந்து நீதிமன்றம் விடுவித்தால் அவர் மீது பிறப்பிக்கப்பட்ட இடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்படும் என்றும் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தன்மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை எதிர்த்து வளர்மதி தாக்கல் செய்த வழக்கின் விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. இன்றைய விசாரணைக்கு பின்னர் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

இந்த உத்தரவால் வளர்மதி மீண்டும் கல்லூரியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.