கர்ப்பிணி யானையை அடுத்து கர்ப்பிணி பசு: கோதுமை மாவில் வெடிகுண்டு வைத்ததால் பரபரப்பு 

  • IndiaGlitz, [Saturday,June 06 2020]

கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு அன்னாசி பழத்தில் வெடிகுண்டு வைத்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது அரசியல் ஆக்கப்பட்டு மதப்பிரச்சனையாக மாற்றப்பட்டு வருகிறது என்பது கொடுமையான ஒன்றாக கருதப்படுகிறது

இந்த நிலையில் கேரளாவில் யானைக்கு அன்னாசி பழத்தில் வெடிகுண்டு வைத்த விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது கர்ப்பிணி பசுவிற்கு கோதுமை மாவில் வெடிகுண்டு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள பிலாஸ்பூர் என்ற பகுதியில் கடந்த 26ஆம் தேதி கர்ப்பிணி பசு ஒன்று பசிக்காக கோதுமை மாவு உருண்டையை சாப்பிட்டுள்ளது. அப்போது திடீரென அந்த மாவு உருண்டையில் உள்ள வெடிகுண்டு வெடித்து அந்த பசுவின் வாய் சிதைந்ததாக போலீசார்களின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது விளை நிலங்களில் உள்ள பயிர்களை பசுக்கள் நாசம் செய்வதால்தான் யாரோ மர்ம நபர்கள் இவ்வாறு கோதுமை மாவு உருண்டையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி உள்ளனர். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது

More News

கூகுள் இன்காக்னிடோ பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கு சுமார் ரூ.38 லட்சம் கிடைக்க வாய்ப்பு

உலகில் பெரும்பாலானோர் கூகுள் குரோம் பிரவுசரை தான் பயன்படுத்தி வரும் நிலையில் ஒருசில பயனாளிகள் மட்டும் தங்களுடைய பிரவுசர் ஹிஸ்டரி, குக்கீஸ் உள்ளிட்ட தகவல்கள்

'மாரி 2' பட நடிகருக்கு மீண்டும் புரமோஷன்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'மாரி 2'. இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்த டொவினோ தாமஸ்க்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

அவரை போல யாருமே இல்லை: நயன்தாராவை புகழ்ந்த லேடி சூப்பர் ஸ்டார்

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்றால், மலையாள திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக புகழப்படுபவர் நடிகை மஞ்சுவாரியர். கணவர் திலீப்பை விவாகரத்து செய்த பின்னர் மீண்டும்

100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யக் காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள்!!! தொடரும் அவலம்!!!

கொரோனா ஊரடங்கினால் உலகமே கடும் பொருளாதார நெருக்கடிக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட கருத்து!!! குறுக்கே வந்த பாகிஸ்தான்!!!

கடந்த சில தினங்களாக இந்திய கிரிக்கெட் வீரர்களைப் பற்றி பாகிஸ்தான் ஊடகங்கள் தாறுமாறான கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.