ஹிப் பாப் ஆதியின் யுடியூப் பக்கத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள்....!

  • IndiaGlitz, [Monday,July 26 2021]

இசையமைப்பாளர் ஹிப் பாப் ஆதியின், யுடியூப் பக்கத்தை முகம் தெரியாத மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர்.

நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஹிப் பாப் ஆதி அவர்கள் ஹிப் ஹாப் தமிழா என்ற பெயருடைய, யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதில் அவர் இசையமைத்த பாடல்கள் மற்றும் documentry படங்களை வெளியிடுவது வழக்கம். சமீபத்தில் கூட தீயணைப்பு வீரர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தீ வீரன் என்ற டாக்குமெண்டரியை வெளியிட்டு இருந்தார். இது ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே மிகவும் வைரலானது. வெப் சீரிஸ் போல வெளியிட்ட தமிழி என்ற டாக்குமெண்டரிக்கும் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அதிகம். 20 லட்சத்திற்கும் அதிகமானோர், இவரின் சேனலை பின்தொடர்ந்து வந்தார்கள்.

இந்தநிலையில் இவரின் யூடியூப் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்து முடக்கியுள்ளனர். அவரின் சேனல் பெயரையும் Algorand social news என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர். அதிலுள்ள வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. கஷ்டப்பட்டு திரைத்துறையில் சாதித்த நபர்களின் பட்டியலில் ஆதியின் பெயரும் இடம்பெறும். அந்த அளவிற்கு கடும் உழைப்பு போட்டு, ஆல்பம் பாடல்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவரின் யுடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டத்திற்கு, ஆதிக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பலரும் மீம்ஸ் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

கார் விபத்து எதிரொலி: யாஷிகா மீது போலீஸ் எடுத்த அடுத்த அதிரடி நடவடிக்கை!

நடிகை யாஷிகா தனது தோழி மற்றும் நண்பர்களுடன் சென்ற கார் நேற்று முன்தினம் நள்ளிரவில் விபத்துக்குள்ளானதில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பதும், யாஷிகாவும் அவரது இரண்டு ஆண்

செல்போன் வேவு பார்க்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு… பெகாசஸ் வெளியிட்ட அதிரடி பதில்!

பெகாசஸ் உளவுக் கருவிகள் உள்ளதால்தான் உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சாலைகளில் சுதந்திரமாக நடமாடுவதாக அதனைத் தயாரித்த

காதலித்ததால் ஆண் உறுப்பு அறுக்கப்பட்ட இளைஞர்… வன்முறையில் முடிந்த சம்பவம்!

பீகார் மாநிலத்தில் தன் வீட்டு பெண்ணை காதலித்த 18 வயது இளைஞர் ஒருவரை ஆணுறுப்பை சிதைத்து கொலை செய்துள்ளனர்.

பா ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்: 'சார்பாட்டா பரம்பரை' படம் குறித்து நடிகர் நாசர்!

சமீபத்தில் வெளியான பா ரஞ்சித் இயக்கிய 'சார்பாட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை திரை உலக பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பாராட்டி வருகின்றனர்.

இறந்த பின்பு குறட்டை விட்டு தூங்கிய நபர்… மருத்துவர்களே வியந்துபோன அதிசயம்!

ஸ்பெயின் நாட்டில் சிறையில் இருந்த ஜிமென்ஸ் எனும் நபர், உயிரிழந்த