மருமகளுக்காக விமான விபத்தில் உயிரிழந்த அகிலேஷ் தந்தையின் முக்கிய கோரிக்கை: அரசு பரிசீலிக்குமா?

சமீபத்தில் துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த விமானம் ஒன்று தரை இறங்கிய போது திடீரென விபத்துக்குள்ளானது என்பது தெரிந்ததே. இந்த விமான விபத்தில் கேப்டன் டிவி சாதே மற்றும் துணை விமானி அகிலேஷ் குமார் ஆகிய இருவரும் பரிதாபமாக பலியாகினர்.

இந்த நிலையில் துணை விமானி அகிலேஷ் குமாரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் அவருக்கு இன்னும் இரண்டு வாரங்களில் குழந்தை பிறக்கும் என்றும் செய்திகள் வெளியானது. இன்று காலை அகிலேஷ் குமாரின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதும் உள்ளூர் பிரமுகர்கள் பலர் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அகிலேஷ் குமாரின் தந்தை ’தனது மருமகள் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் அவருக்கும் அவருடைய குழந்தையின் வாழ்வாதாரத்திற்கும் உதவியாக இருக்கும் வகையில் தனது மருமகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

16 வயது சிறுமிக்கு ஆபாச படம் போட்டுக் காட்டிய பெண் பாய்பிரண்டுடன் கைது

புனே அருகே ஒரு பெண் தனது 16 வயது மகளை தனது உறவினர் பெண் வீட்டில் ஊரடங்கு நேரத்தில் விட்டு சென்று உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் விட்டுச்சென்ற அந்த பெண்

ரஷ்ய நதியில் மூழ்கி 4 தமிழக மாணவர்கள் பலி: ஒருவர் சென்னை மாணவர் என தகவல்

தமிழகத்தில் இருந்து ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற நான்கு மாணவர்கள் அங்குள்ள ஒரு நதியில் மூழ்கி உயிரிழந்ததாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர்: விஜய் சேதுபதிக்கு இரண்டாவது இடம்தான் 

800 விக்கெட்டுகள் எடுத்து சாதனை செய்த இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழில் உருவாக உள்ளது என்பது தெரிந்ததே.

அரசியல் வருகை குறித்து ராகவா லாரன்ஸ் கருத்து!

எந்த ஒரு இயற்கை பேரிடர் வந்தாலும் முதல் நபராக பொது மக்களுக்கு உதவி செய்து வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ் என்பது தெரிந்ததே.

பிறந்தநாளில் தளபதி விஜய்க்கு சேலஞ்ச் விடுத்த மகேஷ்பாபு: வைரலாகும் வீடியோ

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு தென்னிந்திய திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது