கமல்ஹாசனின் 11வது அவதாரத்திற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் கண்டனம்

  • IndiaGlitz, [Thursday,November 02 2017]

பிரபல வார இதழ் ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொடர் எழுதி வருவது தெரிந்ததே. அதில் இந்த வாரம் 'முன்பெல்லாம் இந்து வலது சாரியினர் மற்ற மதத்தை சார்ந்தவர்களுடன் தாங்கள் வன்முறையில் ஈடுபடாமல், வாத பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். இந்த சூழ்ச்சி தோற்க ஆரம்பித்தவுடன் தற்போது அவர்களும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். எங்கே ஒருஇந்து தீவிரவாதியை காட்டுங்கள் என்று இனி அவர்கள் சவால் விட முடியாது. வாய்மை வெல்லும் என்ற நம்பிக்கை போய் வலிமை வெல்லும் என்ற நம்பிக்கை அனைவரையும் காட்டுமிராண்டிகளாக்கிவிடும்' என்று கமல் கூறியுள்ளார்

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் ஏற்கனவே விஸ்வரூபம் படத்தின் மூலம் யார் தீவிரவாதிகள் என்பதை புரிந்து கொண்டு நாட்டை விட்டே போகப்போகிறேன் என்று கூறியவர். ஏற்கனவே 'தசாவதாரம்' என்ற படத்தில் பத்து அவதாரம் எடுத்த கமல், தற்போது 11வது அவதாரமாக இடதுசாரி அவதாரம் எடுத்துள்ளார். ஒரு இடது சாரியின் பார்வையில் இந்து தீவிரவாதம் என்று அவர் தவறாக கருத்து கூறியுள்ளார். எனவே கமல்ஹாசனுக்கு எங்களுடைய கண்டனத்தை தெரிவித்து கொள்வதோடு, கமல் தான் கூறியதை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்' என்று கூறினார்.

ஏற்கனவே கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மெர்சலான கேள்வி கேட்ட செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்த பாஜக தொண்டர்கள்

கொடுங்கையூரில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் துயரக்கடலில் ஆழ்த்தியுள்ள நிலையில் சிறுமியின் வீட்டிற்கு அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சென்று துக்கம் விசாரித்து வருகின்றனர்.

சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால்: திரை முன்னோட்டம்

வெண்ணிலா கபடிக்குழு', 'அழகர்சாமியின் குதிரை', 'பாண்டிய நாடு', 'ஜீவா' உள்பட பல தரமான வெற்றிப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த படம் தான் 'நெஞ்சில் துணிவிருந்தால்'

வெயிலை பார்த்து ஏமாற வேண்டாம், இன்றும் மழை உண்டு. தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் இன்று காலை முதல் வெயில் அடித்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்

நித்திரை கலைத்து நீரில் மூழ்குவதை தவிர்ப்போம்: கமல் மீண்டும் எச்சரிக்கை

உலக நாயகன் கமல்ஹாசன் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே எண்ணூரில் உள்ள ஆபத்து குறித்து தனது சமூக வலைத்தளத்தில் எச்சரித்ததோடு, அந்த பகுதிக்கு நேரில் சென்றும் ஆய்வு செய்தார்.

தம்பி ராமையா இயக்கும் படத்தின் ஹீரோ-டைட்டில் அறிவிப்பு

நடிகர் தம்பிராமையாவை அனைவருக்கும் ஒரு நகைச்சுவை நடிகராகத்தான் தெரியும், ஆனால் ஒரு இயக்குனர் என்பது வெகுசிலருக்கே தெரிந்த உண்மை.