close
Choose your channels

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் ஹாலிவுட் நடிகர்: வேற லெவல் திட்டம்!

Saturday, September 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ஆயிரம் கோடிக்கு ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் மகேஷ் பாபு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

எஸ்எஸ் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதையில் உருவாகும் இந்த படத்தின் கதை ஆப்பிரிக்க காடுகள் பின்னணியில் நடைபெறும் கதையம்சம் கொண்டது என்றும் பிரம்மாண்டமான அதிரடி ஆக்ஷன் படமாக இந்தப் படம் இருக்கும் என்றும் ஏராளமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் இந்த படத்திற்காக செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிரபல ஹாலிவுட் நடிகர் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஹாலிவுட்டில் சூப்பர்ஹிட்டான ’தோர்’ மற்றும் ’அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மகேஷ் பாபு மற்றும் ஹாலிவுட் நடிகர் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தை வேற லெவலில் உருவாக்க எஸ்எஸ் ராஜமவுலி திட்டமிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.