விஜய்சேதுபதி-டாப்ஸி படத்திற்கு ஹாலிவுட் பட டைட்டில்?

  • IndiaGlitz, [Saturday,September 19 2020]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி ஆகிய இருவரும் நடித்து வரும் திரைப்படத்தை பழம்பெரும் இயக்குநர் சுந்தரராஜனின் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே மூச்சில் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் இருபது நாட்கள் மட்டுமே மீதம் இருப்பதாகவும் அதற்குள் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் இந்த திரைப்படத்தை திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி ஆகிய இருவருமே இரண்டு வேடங்களில் நடித்து வருவதாகவும் ஒரு செய்தி பரபரப்பாக கோலிவுட்டில் பரவி வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு ‘அன்னபெல்லி சுப்பிரமணியம்’ என்ற டைட்டில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

’அன்னபெல்லி’ என்ற டைட்டிலில் உலக அளவில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியானது என்பதும் இந்த படம் ஒரு திரில்லர் கதையம்சம் கொண்டது என்பதும் தெரிந்ததே., அந்த படத்தின் டைட்டில் விஜய்சேதுபதி-டாப்ஸி படத்திற்கும் இயக்குனர் தீபக் சுந்தர்ராஜ் வைத்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

இந்தக் காலத்திலுமா… பெண்ணாக இருப்பதால் ஓட்டுநர் உரிமம் மறுக்கப்பட்ட சம்பவம்!!!

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பகுதியில் ஓட்டுநர் உரிமம் வாங்க சென்ற பெண்மணி ஒருவருக்கு அவரது பாலினத்தைச் சுட்டிக்காட்டி ஓட்டுநர்

சர்வாதிகாரத்துக்கு ஒரு எல்லையே இல்லையா? கொரோனா விஷயத்திலும் பகை பாராட்டும் வடகொரியா!!!

உலகத்தின் பார்வையில் இருந்து எப்போதும் ஒளிந்து கொண்டே இருக்கும் வடகொரியா கொரோனா

போட்டியாளர்களும் குறைப்பு, நாட்களும் குறைப்பு: சுவராசியமாக செல்லுமா பிக்பாஸ்?

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நான்காவது சீசன் அக்டோபர் 10ம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

சிகரெட் கேட்டு தகராறு செய்தார்களா கைதான நடிகைகள்? பெங்களூர் சிறையில் பரபரப்பு!

போதைப்பொருள் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் என்ற கன்னட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி

இந்தியாவில் பதுங்கிய இருந்த அல்கொய்தா தீவிரவாதிகள்… NIA வின் பரபரப்பான கைது பின்னணி!!!

தேசியப் புலனாய்வு அமைப்பினர் இன்று அதிகாலையில் இந்தியா முழுவது&#