close
Choose your channels

கொரோனா பாதிப்பு அடைந்தவர்களுக்காக ரூ.7.42 கோடி நிதியுதவி செய்த நட்சத்திர தம்பதி

Thursday, March 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா உள்பட உலகம் முழுவதும் 125 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக உலகின் பல இடங்களில் நலத்திட்ட அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் நிதி உதவிகள் பெறப்படுகிறது. இந்த நிதியிலிருந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள், முதியவர்கள் ஆகியோர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துகள் வழங்க பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹாலிவுட் நட்சத்திர தம்பதிகளான நடிகர் ரயான் ரெனால்ட்ஸ், நடிகை பிளேக் லைவ்லி ஆகியோர் 7.42 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கி உள்ளனர் அபீடிங் அமெரிக்கா மற்றும் புட் பாங்க்ஸ் கனடா ஆகிய இரண்டு அமைப்புகளுக்கு இந்த தொகையை இந்த நட்சத்திர தம்பதிகள் வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஹாலிவுட் நடிகர்களான டாம் ஹாங்க்ஸ், தனக்கும் தனது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்தார் என்பதும் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்த நடிகை ஓல்கா குரிலென்கோ என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos