close
Choose your channels

எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது: 15 வருட அனுபவமுள்ள தமிழ் நடிகை பேட்டி

Friday, February 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகை ஒருவர் தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ’பாய்பிரெண்ட்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் தமிழில் சிங்கம்புலி, காந்தர்வன், மல்லுக்கட்டு போன்ற தமிழ் படங்களில் நடிகை ஹனிரோஸ் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தானும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியதாகவும், ஆனால் தன்னுடன் பெற்றோர்கள் எப்போதும் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக அதில் சிக்கவில்லை என்று கூறியுள்ளார்

15 ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவில் அறிமுகமானாலும் இடையில் சில ஆண்டுகள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்ததாகவும் அந்த நேரத்தில் பட வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருந்தபோது பாலியல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்ததாகவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக பெற்றோர்கள் என்னுடனே இருந்ததால்தான் அதில் சிக்கவில்லை என்றும் கூறினார்

அதன்பிறகுதான் முன்னணி நடிகையாக மாறிய பிறகு தனக்கு யாரும் பாலியல் தொல்லைகள் தரவில்லை என்றும் புதுமுக நடிகைகளுக்கு மட்டுமே பெரும்பாலும் பாலியல் தொல்லை பிரச்சினைகள் இருப்பதாகவும் நடிகைகள் பிரபலமாகி விட்டால் அந்த தொல்லை இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் அதே சமயம் இப்போது திரை உலகில் ஒரு பாசிட்டிவ் சூழல் நிலவுவதாகவும் இப்போது பாலியல் தொல்லை அதிகமாக இருப்பதாக தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.