எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது: 15 வருட அனுபவமுள்ள தமிழ் நடிகை பேட்டி

  • IndiaGlitz, [Friday,February 28 2020]

பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகை ஒருவர் தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ’பாய்பிரெண்ட்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் தமிழில் சிங்கம்புலி, காந்தர்வன், மல்லுக்கட்டு போன்ற தமிழ் படங்களில் நடிகை ஹனிரோஸ் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தானும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியதாகவும், ஆனால் தன்னுடன் பெற்றோர்கள் எப்போதும் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக அதில் சிக்கவில்லை என்று கூறியுள்ளார்

15 ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவில் அறிமுகமானாலும் இடையில் சில ஆண்டுகள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்ததாகவும் அந்த நேரத்தில் பட வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருந்தபோது பாலியல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்ததாகவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக பெற்றோர்கள் என்னுடனே இருந்ததால்தான் அதில் சிக்கவில்லை என்றும் கூறினார்

அதன்பிறகுதான் முன்னணி நடிகையாக மாறிய பிறகு தனக்கு யாரும் பாலியல் தொல்லைகள் தரவில்லை என்றும் புதுமுக நடிகைகளுக்கு மட்டுமே பெரும்பாலும் பாலியல் தொல்லை பிரச்சினைகள் இருப்பதாகவும் நடிகைகள் பிரபலமாகி விட்டால் அந்த தொல்லை இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் அதே சமயம் இப்போது திரை உலகில் ஒரு பாசிட்டிவ் சூழல் நிலவுவதாகவும் இப்போது பாலியல் தொல்லை அதிகமாக இருப்பதாக தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்

More News

வடசென்னை படத்தில் நடித்தது மிகவும் தவறு: மாஸ்டர் நடிகையின் அதிர்ச்சி பேட்டி 

வடசென்னை படத்தில் ஆண்ட்ரியா கூறிய சர்ச்சைக்குரிய படுக்கையறை காட்சி படத்தில் இடம் பெறவில்லை என்றாலும் அந்த காட்சிகள் இணையதளங்களில் லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

யாரும் யாரை நம்பியும் பிறக்கவில்லை: பா ரஞ்சித் ஆவேசம்

அட்டக்கத்தி' என்ற படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் கார்த்தியின் 'மெட்ராஸ்', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் காலா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித்

மகேஷ்பாபு, பிரபாஸை அடுத்து விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

பிரபல தெலுங்கு மற்றும் பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் மகேஷ்பாபு உள்பட பல பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தில் அவர் ஜோடியாக நடிக்க வாய்ப்பு

பாலாவின் 'வர்மா' ரிலீஸ் ஆகிறதா? பரபரப்பு தகவல் 

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்த திரைப்படம் 'வர்மா'. இந்த படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் திடீரென அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாது

'மாநாடு' படத்தின் படப்பிடிப்பில் திடீர் மாற்றம்!

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கும் 'மாநாடு' திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய கட்ட படப்பிடிப்பு கடந்த 19ஆம் தேதி சென்னையில் தொடங்கியது