close
Choose your channels

அமெரிக்கா, இங்கிலாந்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை: எஸ்பிபி குறித்த லேட்டஸ்ட் அறிக்கை

Saturday, August 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை கடந்த சில நாட்களாக கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் நேற்று அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது

இந்த நிலையில் சற்று முன் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என்றும், அமெரிக்கா பிரிட்டன் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது

மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள எஸ்பிபி அவர்களுக்கு வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் தொடர் சிகிச்சை நடந்து வருவதாகவும், மருத்துவர் குழுவினர் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை நேற்றும் இன்றும் சீராக இருப்பதை அறிந்து அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.