மன உளைச்சலால் மேலும் ஒரு பிரபல நடிகை தற்கொலை

  • IndiaGlitz, [Thursday,February 09 2017]

நடிகைகளின் வாழ்க்கை முறையை வெளியில் இருந்து பார்க்கும்போது ஆடம்பரமாக தெரிந்தாலும், பல நடிகைகள் மிகுந்த மன உளைச்சலுடன் தான் இருந்துள்ளார்கள் என்பது அவ்வப்போது வரும் நடிகைகளின் தற்கொலையில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ச்சியாக ஏற்படும் மன உளைச்சல் காரணமாக சில்க் ஸ்மிதா உள்பட பல நடிகைகள் தற்கொலை செய்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகை தற்கொலை பட்டியலில் இணைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் பெங்காலி நடிகை பிடாஸ்டா சாஹா என்பவர் அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக அவர் மன வருத்தத்தில் இருந்துள்ளார் என்பது அவரது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்ட பதிவுகளில் இருந்து தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

கொல்கத்தாவில் தனியாக வசித்து வந்த பிடாஸ்டா சாஹாவை வெளியூரில் உள்ள அவரது தாயார் தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த அவர் உடனே பிடாஸ்டா சாஹா வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடாஸ்டா சாஹாவின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

சசிகலா முதல்வராக தடை கோரிய வழக்கு. சுப்ரீம் கோர்ட் முக்கிய முடிவு

தமிழகத்தில் நடைபெற்று வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஒருபக்கம் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இன்னொரு பக்கம் சசிகலாவுக்கு அதரிச்சி தரும் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே உள்ளது.

சென்னை வந்தார் கவர்னர். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் சற்றுமுன் சென்னை வந்து இறங்கினார்.

பரபரப்பான சூழ்நிலையில் சசிகலாவை முந்திவிட்டார் ஓபிஎஸ்

தமிழக அரசியல் களம் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பில் உள்ள நிலையில் தமிழக பொருப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் இன்னும் சற்று நேரத்தில் சென்னை வருகிறார்.

மதுசூதனை தொடர்ந்து இன்னொரு முக்கிய அமைச்சரும் ஆதரவு. ஓபிஎஸ் அணி உற்சாகம்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்களின் வரவால் முதல்வர் ஓபிஎஸ் அணியின் கை ஓங்கியுள்ள..

திடீர் திருப்பம். ஓபிஎஸ்-இன் போர்ப் படையில் இணைந்த மதுசூதனன்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்கள் முதல்வர் ஓபிஎஸ் இல்லத்திற்கு வருகை தந்து தனது முழு ஆதரவை அளித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.