சுந்தர் சியின் கனவுப்படம் 'சங்கமித்ரா'வின் நாயகி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,February 14 2017]

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ள 'சங்கமித்ரா' திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளார் என்பது அறிந்ததே.
சுந்தர் சியின் கனவுப்படமான இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசன் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே முதல் பல முன்னணி நடிகைகள் இந்த படத்தின் நாயகி கேரக்டருக்கு பரிசீலித்து வந்த நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

மேல்முறையீடு செய்வோம். தம்பித்துரை

சசிகலா உள்பட மூவருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சசிகலா ஆஜராக வேண்டிய நீதிபதி பெயர் அறிவிப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹா அவர்களின் தீர்ப்பை இன்று காலை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இதனால் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவரும் உடனே ஆஜராக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

சசிகலா இதற்கும் பதில் சொல்ல வேண்டும். கவுதமி

சசிகலாவுக்கு தற்போது ஊழல் வழக்கிற்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. அவர் மறைந்த முதல்வர் அம்மாவின் மரணத்திற்கும் பதில் சொல்ல வேண்டும் என்று இன்றைய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து நடிகை கவுதமி கூறியுள்ளார்.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஒபிஎஸ் நீக்கம்

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட மூவர் குற்றவாளி என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியதை அடுத்து சசிகலாவுக்கு பதிலாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிமுகவின் சட்டமன்ற புதிய தலைவர் தேர்வு.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி கடந்த சில மணி நேரங்களாக இருந்து வந்தது.