வித்தியாசமான போஸ் கொடுத்த பிரபல நடிகை கைது.

  • IndiaGlitz, [Friday,February 10 2017]

இந்தி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'எக் யோதா' என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி அல்பாட். இவர் தற்போது பியர்ல்புரி என்ற டிவி நடிகருடன் இணைந்து தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்த தொடரின் படப்பிடிப்புக்காக கொண்டு வரப்பட்ட பாம்பு ஒன்றை நடிகை ஸ்ருதி உள்பட ஒருசிலர் கையில் பிடித்து போஸ் கொடுத்தனர். பின்னர் இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர்.
இதனை கண்ட சமூல நல ஆர்வலர்கள் பாம்பை கையில் பிடித்து போஸ் கொடுத்தவர்கள் மீது தானே வனத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்ய வந்த அதிகாரிகளிடம் நடிகை ஸ்ருதி, 'தாங்கள் வைத்திருந்தது உண்மையான பாம்பு இல்லை என்று கூறினார்.
ஆனால் வனத்துறை அதிகாரிகள் அந்த புகைப்படத்தை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்ததில் அது உண்மையான பாம்புதான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக நடிகை ஸ்ருதி அல்பாட், பியர்ல் புரி, தயாரிப்பாளர்களான நிதின் சோலங்கி, உட்கார்ஷ் பாலி ஆகிய நான்கு பேரும் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். தொலைக்காட்சி நடிகை கைதால் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

ஓபிஎஸ் மூலம் எனக்கு மிரட்டல் வருகிறது. சி.ஆர்.சரஸ்வதி

தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைப்பது யார் என்பது குறித்த பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களில் ஒருவரான சி.ஆர்.சரஸ்வதி தனக்கு மிரட்டல் வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

சசிகலா பதவியேற்பு இல்லையா? சென்னை பல்கலையில் பாதுகாப்பு வாபஸ்

தமிழக முதல்வராக சசிகலா விரைவில் பதவியேற்பார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் பதவியேற்க வசதியாக சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு மண்டபம் தயார் செய்யப்பட்டு அதற்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது....

டிஜிபியை அடுத்து தலைமைச்செயலாளர், உளப்பிரிவு ஆணையர் கவர்னருடன் சந்திப்பு. என்ன நடக்க போகிறது?

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் சற்று முன்னர் டிஜிபி ராஜேந்திரன் அவர்களை சந்தித்து தமிழக சட்ட ஒழுங்கு, எம்.எல்.ஏக்களின் இருப்பிடம் குறித்து ஆலோசனை செய்தார்...

ஆளுனர் மாளிகையில் டிஜிபி அவசர ஆலோசனை

தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பொறுப்பில் தற்போது இருக்கும் கவர்னர் வித்யாசாகர் ராவ், தற்போதைய அரசியல் சிக்கலை தீர்க்க சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது....

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பிரபல நடிகர்கள்

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இன்று நடந்து வருகிறது. அடங்காமல் திமிறும் காளைகளை அடக்க துடிக்கும் காளையர்களின் கண்கொள்ளா காட்சியை ஆயிரக்கணக்கான தமிழர்கள் நேரில் கண்டுகளித்து வருகின்றனர்...