கொரோனா பாதித்த தாய்-மகனை வீட்டுக்குள் வைத்து பூட்டிய ஹவுஸ் ஓனர்! பெரும் பரபரப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கண்டதும் அஞ்சி ஒதுங்குவதும், அவர்கள் மீது மனித தன்மையற்ற வகையில் நடந்து கொள்வதுமான சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய் மகனை வீட்டுக்குள் வைத்து பூட்டிய ஹவுஸ் ஓனர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் சட்டெனப்பள்ளி என்ற பகுதியில் தாய், மகன் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்த தகவல் அறிந்ததும் அந்த வீட்டின் ஓனர், உடனடியாக அவர்கள் இருவரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டி கூட்டியுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் வெளியே வரமுடியாமல், சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

இதனை அடுத்து ஹவுஸ் ஓனரால் பூட்டப்பட்ட இருவரும் செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என ஹவுஸ் ஓனரை எச்சரிக்கையும் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களை ஒதுக்கி வைக்கக் கூடாது என்றும் சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவுறுத்திய நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் ஒரு சில இடங்களில் நடந்து வருவது கொரோனா குறித்த விழிப்புணர்வு இன்னும் முழுமையாக மக்களை சென்று சேரவில்லை என்பதையே காட்டுகிறது.

More News

கட்டுமான நிறுவனத்தின் மோசடியால் கோடிக்கணக்கில் ஏமாந்த நயன்தாரா, ரம்யாகிருஷ்ணன்! பரபரப்பு தகவல்

பெங்களூரைச் சேர்ந்த பிரபல பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்றின் மோசடியால் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், அஞ்சலி தெண்டுல்கர் உள்ளிட்ட பல விஐபிக்கள் கோடிக்கணக்கில்

அன்லாக் 3.0 நேரத்தில் தியேட்டர்களை திறக்க பரிந்துரை: ஆனால் என்னென்ன நிபந்தனைகள்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த நான்கு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஆகஸ்ட் 1 முதல் தொடங்கவுள்ள அன்லாக் 3.0 காலகட்டத்தில் திரையரங்குகளை

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்: ராகவா லாரன்ஸ் செய்த மிகப்பெரிய உதவி!

நடிகர், நடன இயக்குனர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் இந்த கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் என்ற செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

டி.இமானின் வாழ்த்துக்களை பெற்ற 13 வயது பிரபலம்!

கேரளாவை சேர்ந்த 13 வயது சிறுவன் ஆதித்யா சுரேஷ் என்பவர் இந்த சின்ன வயதிலேயே பாடுவதில் திறமையுள்ளவர் என்பதும், அவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டாகியுள்ளது

தமிழகத்தில் இன்று 6993 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரு லட்சத்தை நெருங்கிய சென்னை!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த நான்கு நாட்களாக 7 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று 5வது நாளாகவும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் என்ற நிலையில் உள்ளது