இந்த மாதிரி ஆளுங்களை வச்சுகிட்டு கொரோனாவை எப்படி ஒழிக்க முடியும்?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு மிக எளிதாக பரவும் என்பதால் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் அனைத்து நாடுகளின் அரசுகளும், மக்களிடம் மக்களை அறிவுறுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டின் முன் நின்று கொரோனாவுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்யும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு கைதட்டி நன்றி தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்

அவர் சொன்னதன் நோக்கத்தை பலர் புரிந்து கொண்டு வீட்டின் முன்னும், பால்கனியிலும் நின்று கைதட்டி மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தனர். ஆனால் ஒரு சிலர் நன்றி தெரிவிக்கிறேன் என்ற பெயரில் வீட்டை விட்டு வெளியே வீதிக்கு வந்து கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

கும்பல் கும்பலாக ஒருவரை ஒருவர் ஆட்டம் போட்டுக்கொண்டு ஆரவாரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ’பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக மாறியது’ என்ற கதை போல நன்றி தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு எல்லோரும் கூட்டமாக வெளியே வந்து கை தட்டி ஆரவாரம் செய்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இவர்களில் யாருக்காவது ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தாலும் அனைவருக்கும் பரவியிருக்கும் அபாயம் உள்ளது. இந்த மாதிரி ஆட்களை வைத்துக் கொண்டு எப்படி கொரோனாவை ஒழிக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

More News

சென்னை உள்பட 3 மாவட்டங்கள் முடக்கப்படுகிறதா? முதல்வர் அவசர ஆலோசனை!

கொரோனா வைரஸை தடுக்க நேற்று நடைபெற்ற மக்கள் சுய ஊரடங்கு வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து கட்டுப்படுத்த,

வெளிமாநில பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் நிறுத்தம்: தமிழக அரசின் அடுத்த அதிரடி

கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்களை காக்க தமிழக அரசு அவ்வப்போது அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் தமிழகத்தில் இருந்து

பிரபல இயக்குனர் விசு காலமானார்!

பிரபல தமிழ் இயக்குனர் விசு உடல்நலக்குறைவால் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 74

மொத்த நாடும் ஒரே நேரத்தில் கைதட்டியது: கொரோனாவை விரட்ட இந்த ஒற்றுமை போதும்

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை தன்னலம் கருதாது காப்பாற்றும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு

சென்னை உள்பட நகரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு: மத்திய சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, இந்தியா முழுவதும் 75 மாவட்டங்களை மார்ச் 31ஆம்  தேதி வரை முடக்க மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.