கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் சிகிச்சை செலவு எவ்வளவு? 

கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு முழு சிகிச்சை செலவு இலவசம் என்பது தெரிந்ததே. இருப்பினும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பாதவர்கள் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் கொரொனா சிகிச்சையின் செலவு குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. பொது வார்டில் கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்றால் நாளொன்றுக்கு 11 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும் ஒரு கொரோனா நோயாளி குறைந்தபட்சம் 15 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்பதால் மொத்தம் 1.65 லட்சம் செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே போல் கொரொனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றால் நாளொன்றுக்கு 50 ஆயிரம் செலவாகும் என்பதும், 15 நாட்கள் சிகிச்சைக்கு ரூ.7.5 லட்சம் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெண்டிலேட்டர் உள்ளிட்ட செலவுகள் தனி என்பதும் வெண்டிலேட்டருக்காக பொது வார்டில் நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் செலவாகும் என்பதும் தீவிர சிகிச்சை பிரிவில் ரூ.10 ஆயிரம் செல்வாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் தனியார் மருத்துவமனையில் 15 நாட்கள் கொரோனா சிகிச்சை எடுத்து கொண்டால் பொது வார்டுக்கு ரூ.2.15 லட்சமும், தீவிர சிகிச்சை பிரிவில் ரூ.8.5 லட்சம் செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா சிகிச்சைக்காக திருமணத்தை தள்ளி வைத்த கேரளா பெண் மருத்துவர்

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவர்கள் நர்ஸ்கள் தன்னலம் கருதாது நாளொன்றுக்கு 15 மணி நேரத்தில் இருந்து 20 மணி நேரம் வரை பணி செய்து வருகின்றனர்

கொரோனா நேரத்தில் நினைவுகூருவோம்; இன்னும் சரிசெய்யப்படாத போபால் அணுவுலை வெடிப்பின் கோரங்கள்!!!

இந்த நூற்றாண்டில் இந்தியா சந்தித்த பெரும் பேரழிவு போபால் அணுவுலை வெடிப்பு. இதன் விளைவுகளையே இன்னும் இந்தியாவில் சரிச்செய்யப்படாத நிலையில் கொரோனா வந்து தாக்கிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் மேலும் 74 பேர்களுக்கு கொரோனா: சுகாதார செயலாளர்

தமிழகத்தில் ஏற்கனவே 411 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்றி

விஜய்சேதுபதிக்காக எழுதிய திரைக்கதை இதுதான்: சேரன்

பாரதி கண்ணம்மா படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, ஆட்டோகிராப் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய நடிகரும் இயக்குனருமான சேரன்,

காய்கறி, மளிகை வாங்கவும் கட்டுப்பாடு: தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்