இந்த விளம்பரத்தை எல்லாம் இந்திய மக்கள் எப்படி ஏத்துக்கிறாங்க??? கடுப்பான டேரன் சமி!!!

 

அமெரிக்காவில் கடந்த மே 25 ஆம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற இளைஞர் நிறவெறி காரணமாக உயிரிழந்தார். அச்சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு உலகம் முழுவதும் பலத் தரப்புகளில் இருந்து நிறவெறிக்கு எதிராகக் குரல் எழுப்பப் பட்டு வருகிறது. பல உலகத் தலைவர்களும் நிறவெறிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளிலும் நிறவெறி காட்டப்படுகிறது என வெளிப்படையான குற்றச்சாட்டுகளை விளையாட்டு வீரர்கள் கூறத் தொடங்கினர்.

வெஸ்ட் இண்டிஸ் முன்னாள் கேப்டன் டேரன் சமி இந்தியாவில் தான் இனவெறுப்பான வார்த்தையுடன் அழைக்கப்பட்டதாக கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து கிறிஸ் கெயில், டிவைன் பிராவோ, ஜிம்பாப்வே அணி வீரர் போமி எம்பாங்க்வா போன்றோர் தங்களுக்கு நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இருந்தனர். இந்திய வீரரான இர்ஃபான் பதான், “தோல் நிறத்தை வைத்து சீண்டுவது மட்டுமல்ல இனவாதம்” என்று தனது கருத்தை பதிவு செய்து இருந்தார். பதானின் கருத்து இந்தியாவில் சிறுபான்மை இனத்தவர் மீது காட்டப்படும் வெறுப்பை குறிப்பதாகப் பலரும் விளக்கம் அளித்து இருந்தனர்.

இந்நிலையில் இந்தியாவில் விற்கப்படும் அழகுச் சாதனப் பொருட்களிலும் நிறவெறி காட்டப்படுவதாக டேரன் சமி கருத்துத் தெரிவித்து இருக்கிறார். பல இனக் கலாச்சாரங்களும், பல நிறத்தவர்களும் கூடி வாழும் ஒரு நாட்டில் நிறவெறிக்கு ஆதரவான கருத்துகளுடன் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்திய மக்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு ஆங்கில நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் டேரன் சமி, “இந்தியாவில் உள்ள பன்முகக் கலாச்சாரத்தில் பல்வேறு நிறங்களில் உள்ள மக்கள் திரள் மத்தியில் எப்படி ஃபேர் அண்ட் லவ்லி என்று ஒரு கிரீமுக்கு பெயர் வைத்து அதை ஏற்றுக் கொள்கிறீர்கள். இந்தப் பெயரிலேயே நிறப்பாகுபாடு இருக்கிறதே. உங்கள் விளம்பரம் வெள்ளை நிறமே அழகு என்கிறது. இது நிறபேதத்தை சூசகமாக அறிவிக்கிறது” எனக் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

ஏற்கனவே ஃபேர் அண்ட் லவ்லி என்ற பெயருக்கு வலுவான எதிர்ப்பு கிளம்பி விட்டது. எனவே இந்திய விற்பனை பொருட்களில் ஃபேர் என்பது போன்ற சொற்களில் இடம் பெறாது என்ற அறிவிப்பை யுனிலீவர் நிறுவனம் கடந்த வாரத்தில் வெளியிட்டு இருந்தது. அதைப் போலவே பாலிவுட் நட்சத்திரங்கள் மத்தியில் அழகுச் சாதனப் பொருட்களுக்கு நடிப்பது குறித்த சர்ச்சையும் வெடித்தது. ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு பிறகு உலகம் முழுவதும் இனவெறிக்கு எதிராக கருத்துகள் வலுவாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் “கறுப்பர்கள் வாழ்க்கை முக்கியம்” என்ற வாசக அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இதன் செயல் வீரராக டேரன் சமி பங்கு வகிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சாத்தான்குளம் சம்பவம் அரசாங்கத்தின் தவறல்ல: பாரதிராஜா அறிக்கை

சாத்தான்குளம் தந்தை-மகன் காவல்துறையினரால் அடித்தே கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ரஜினி, கமல் உள்பட ஒட்டுமொத்த திரையுலகமும் குரல் கொடுத்துள்ள நிலையில்

மாஸ்க் அணிவதும் அணியாமல் இருப்பதும் அவருடைய விருப்பம்… கெத்துக் காட்டும் வெள்ளை மாளிகை!!!

கொரோனா நோய்த்தொற்று உலக மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி, முறையான சிகிச்சை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை.

கொந்தளித்த ரஜினிகாந்த்: கோபத்துடன் புகைப்படம் வெளியீடு

சாத்தான்குளம் தந்தை-மகன் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு அங்கு அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு காரணமாக தமிழகமே கொந்தளித்துப் போயுள்ளது

ஜெயராஜ் கடைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தும் சிபிசிஐடி டி.எஸ்.பி: தாமாக முன்வந்து தகவல்களை தரும் வியாபாரிகள்

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ள நிலையில்

நெய்வேலி லிக்னசைட் ஆலையில் ஏற்பட்ட விபத்து!!! 17 பேர் காயம் மற்றும் பரபரப்பு தகவல்கள்!!!

நெய்வேலி லிக்னைட் ஆலையில் 2 ஆம்  நிலையில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டு இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.