close
Choose your channels

'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு சமந்தா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Monday, January 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் இடம் பெற்ற ’ஊ சொல்றியா மாமா ஊஊ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு நடிகை சமந்தா ஐட்டம் டான்ஸ் ஆடினார் என்பதும் இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் உள்பட ஒரு சில மொழிகளில் இந்த படம் ஹிட்டாக இந்த பாடலும் ஒரு முக்கிய காரணம் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட நடிகை சமந்தா வாங்கிய சம்பளம் அவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை விட அதிகம் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த பாடலுக்கு அவர் ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகிஉள்ளது. 3 நிமிடங்கள் மட்டுமே படத்தில் ஓடும் இந்த பாடலுக்கு நடனமாட முதலில் சமந்தா மறுத்ததாகவும், அதன் பின்னர் அல்லு அர்ஜுன் அவரை சமாதானப்படுத்தியதோடு, ரூ.5 கோடி சம்பளம் தர முன்வந்ததாகவும், அதன் பின்னரே சமந்தா இந்த பாடலுக்கு நடனமாட சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரே ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கிய தகவல் தற்போது இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.