இன்றைய உலக சாம்பியனுக்கு அன்றே ஸ்பான்சர் செய்த எஸ்பிபி!

இன்று உலக அளவில் சாம்பியன் பட்டம் பெற்று உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீரர் ஒருவருக்கு முதல் முதலில் ஸ்பான்சர் செய்தது எஸ்பிபி அவர்கள்தான் என்ற தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது

செஸ் விளையாட்டில் உலக புகழ்பெற்று, பல சாம்பியன் பட்டங்களை பெற்றவர் விஸ்வநாதன் ஆனந்த். ஆனால் அவர் 14 வயதில் தேசிய செஸ் போட்டியில் விளையாட இருந்தபோது அவருக்கு முதன்முதலில் ஸ்பான்சர் செய்தது எஸ்பிபிதான் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த தகவலை விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்

தான் 14 வயதாக இருக்கும்போது ’மெட்ராஸ் கோல்ட்’ என்ற செஸ் அணியில் இருந்ததாகவும், அந்த அணி கடந்த 1983 ஆம் ஆண்டு தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள இருந்தபோது தங்கள் அணிக்கு ஸ்பான்சர் செய்தது எஸ்பிபி அவர்கள் தான்’ என்றும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்

மேலும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் தாயார் எஸ்பிபி அவர்களின் தீவிர ரசிகை என்றும், அவர்கள் சமையல் செய்யும் போது கேட்கும் பாடல்கள் அனைத்துமே ஸ்பிபி பாடல்கள் தான் என்றும் குறிப்பாக ’நிழல் நிஜமாகிறது’ படத்தில் இடம்பெற்ற ’கம்பன் ஏமாந்தான்’ என்ற பாடல் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்றும் விஸ்வநாதன் ஆனந்தின் மனைவி அருணா அவர்கள் நினைவு கூர்ந்துள்ளார்

மேலும் சுகாசினி மணிரத்தினம் அவர்கள் எடுத்த பேட்டி ஒன்றில் ’செஸ் என்றால் ஆனந்த், ஆனந்த் என்றால் செஸ் என்றும் செஸ் மற்றும் ஆனந்த் என்றால் இந்தியா’ என்றும் பாடகர் எஸ்பிபி அவர்கள் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

காவல்துறை மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் உடல் இன்று தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் முற்பகல் 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

கொரோனா குறித்து கடைசி மேடையில் பேசிய எஸ்பிபி! வைரலாகும் வீடியோ

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று உடல்நலக் குறைவால் காலமான நிலையில் அவருடைய மறைவு செய்தி கேட்டு இந்திய திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

எஸ்பிபிக்காக தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த முக ஸ்டாலின்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் இன்று இசை ரசிகர்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு காலமானார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

மீண்டும்‌ உங்களை இந்த மண்ணில்‌ வரவேற்க காத்திருக்கிறேன்‌: சிம்பு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சிம்பு எஸ்பிபி

குழல் இனிது, யாழ் இனிது எல்லாம் கிடையாது: எஸ்பிபி குரல் தான் இனிது: கலைப்புலி எஸ் தாணு!

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள், எஸ்பிபியின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: