கொரோனாவை தவிர்க்க தனிமனித பாதுகாப்பு உறுதிமொழி

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தனிமனித உறுதிமொழி குறித்து ஒரு அறிக்கையை தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

நான்‌, எனது நன்மைக்காக எடுக்க வேண்டிய தொடர்‌ நடவடிக்கைகள்‌

1. நான்‌ பொது போக்குவரத்தில்‌ பயணம்‌ செய்ய மாட்டேன்‌.

2. நான்‌ எந்த பொது நிகழ்ச்சிகளிலும்‌, கூட்டங்களிலும்‌ கலந்து கொள்ள மாட்டேன்‌.

3). நான்‌ திரையரங்களுக்கோ, உணவகங்களுக்கோ செல்லமாட்டேன்‌.

4. நான்‌ உணவகங்களிலிருந்து உணவினை வீட்டிற்கு வரவழைக்க மட்டேன்‌.

5. நான்‌ உடற்பயிற்சி கூடங்களுக்கோ, நீச்சல்‌ குளத்திற்கோ செல்ல மாட்டேன்‌.

6). நான்‌ மற்றவர்களுக்கு வாழ்த்து சொல்லும்‌ பொழுது, இரு கைகளை கூப்பி வணங்குவேன்‌.

7). நான்‌ என்‌ முகத்தை தொடுவதற்கு முன்‌ கைகளை நன்கு கழுவுவேள்‌.

8). நான்‌ பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்‌ படி, ஒரு நாளைக்கு 10 முதல்‌ 15 முறை, 20
நொடிகளுக்கு கைகளை நன்கு கழுவுவேன்‌.

9). நான்‌ பொது இடங்களில்‌ கைப்படும்‌ இடங்களை தொடுவதை தவிர்ப்பேன்‌.

10). நான்‌ பொது இடங்களுக்கு அவசியமில்லாத காரணங்களுக்கு செல்வதை தவிர்ப்பேன்‌.

இச்சூழ்நிலையில்‌ பொது மக்கள்‌ நலமுடன்‌ இருக்க தன்‌ சுத்தம்‌ பேணுதல்‌ முறைகளை கையாளவேண்டும்‌ என்பதில்‌ நாள்‌ உறுதியாக இருக்கிறேன்‌.

மேற்கண்ட அம்சங்கள் கொண்ட தனிமனித உறுதி மொழியை ஒவ்வொருவரும் எடுத்து கொள்ள வேண்டுமென தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

More News

தமிழக முதல்வர், துணை முதல்வர் எதிர்க்கட்சித் தலைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை???

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் முக்கிய இடங்களில் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்யும் பணிகளில் இந்திய சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது.

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த நடிகை த்ரிஷா!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை த்ரிஷா, கொரோனா விழிப்புணர்வு குறித்தும், கொரோனா பரவாமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத்திற்கு கொரோனா அறிகுறி!!! மலேசிய நிலவரம்!!!

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைச் சந்தித்தப் பின் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகக் கூறி

கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 245,834 பேருக்கு நோய் தொற்று இருப்ப

ரஜினியை அடுத்து தமிழக அமைச்சரை பாராட்டிய 'அண்ணாத்த' நாயகி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாத வகையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,