close
Choose your channels

சிவகங்கையில் எச்.ராஜா? எதிர்த்து போட்டியிடுபவர் யார்?

Friday, March 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தூத்துகுடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் போட்டியிடுவார் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு முக்கிய தொகுதியான சிவகெங்கையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது

கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி பெற்றார். எனவே இந்த தொகுதியில் தனது மகனை வேட்பாளராக்க செந்தில்நாதன் முயற்சி செய்ததாகவும், ஆனால் பாஜக மேலிட செல்வாக்கை வைத்து எச்.ராஜா, இந்த தொகுதியை கைப்பற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த முறை ப.சிதம்பரம் அல்லது கார்த்திக் சிதம்பரம் இருவரில் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.