விவாகரத்தான மனைவி வீட்டில் விருந்து சாப்பிட்ட பிரபல நடிகர்!

பிரபல நடிகர் ஒருவர் ஐந்து வருடங்களுக்கு முன் விவாகரத்தான மனைவியின் வீட்டில் விருந்து சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் ஹிரித்திக் ரோஷன். இவருக்கும் சுசானா என்பவருக்கும் கடந்த 2000ம்ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2014 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நேரத்தில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக கஷ்டப்பட்டு கொண்டு இருந்த சுசானாவை தனது வீட்டிற்கு ஹிருத்திக் ரோஷன் அழைத்து வந்தார் என்ற செய்தி வெளிவந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுசானா தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவிற்கு ஹிருத்திக் ரோஷனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. முன்னாள் மனைவி அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு சென்ற ஹிருத்திக், பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடியதோடு அவரது வீட்டில் விருந்து சாப்பிட்டார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

என்னை கொல்ல வர்றாங்க, காப்பாத்துங்க: குவாரண்டனில் அலறினாரா சுசித்ரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்காவது வாரமாக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதுவரை ரேகா மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளார்.

என் உயிருக்கு ஆபத்து: இயக்குனர் சீனுராமசாமி டுவிட்டால் பரபரப்பு!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான சீனு ராமசாமி 'தென்மேற்கு பருவக்காற்று', 'நீர்ப்பறவை', 'தர்மதுரை', 'கண்ணே கலைமானே' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

அஜித் ஒரு மகாத்மா: பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி பேட்டி

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி வயதான போட்டியாளராக இருந்தாலும் இளமையான போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில்

கெத்து காட்டிய பாலாஜி, உசுப்பிவிட்ட அர்ச்சனா, பலியாடான வேல்முருகன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 23 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய நிகழ்ச்சி சுவராசியமாக இருந்தது. ஆரம்பத்தில் அனிதாவின் அழுகை சற்று போரடித்தாலும் அதன்பின் தங்கச்சுரங்கம் டாஸ்க்  

4 மாவட்டங்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க இருப்பதன் காரணமாகவும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது