ரஜினி-ரஞ்சித் படத்தில் அக்சயகுமார் நாயகி?

  • IndiaGlitz, [Tuesday,May 16 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள படம் குறித்த கதை குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் விளக்கம் அளித்து, பிரச்சனைக்கு முடிவுகட்டிவிட்டதை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புக்கான ஆயத்தப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க போகும் நாயகி குறித்தும் கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றது.

வித்யாபாலன், நயன்தாரா உள்பட பல நடிகைகளின் பெயர் இந்த படத்தின் நாயகி கேரக்டருக்கு பரிசீலனை நடந்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது புதியதாக பிரபல பாலிவுட் நடிகை ஹூமாகுரேஷி என்பவரும் இந்த பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்துள்ளார். இவர் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அக்சயகுமாரின் 'ஜாலி எல்.எல்.பி' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர். இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் தமிழில் இவர் நடிக்கும் முதல் படமான இந்த படமாகத்தான் இருக்கும்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 28ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

More News

ரஜினியின் அரசியல் பேச்சு: மு.க.ஸ்டாலின், திருமாவளவன், தமிழிசை கருத்து

சூப்பர் ஸ்டார் கடந்த பல வருடங்களாக அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்து வந்தாலும் நேற்று அவர் ரசிகர்களிடையே கூறிய கருத்து சற்று வித்தியாசமாக இருந்தது...

7 வருட 'எந்திரன்' சாதனையை முறியடித்த 'பாகுபலி 2'

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ஒவ்வொரு சாதனையாக தகர்த்து வருவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இதுவரை தமிழகத்தில் மிக அதிகமாக வசூல் செய்த படம் என கடந்த 7 வருடங்களாக சாதனையில் இருந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'எந்திரன்' திரைப்படம்...

பிரபல கோலிவுட் இசையமைப்பாளர் பாலிவுட்டில் அறிமுகம்

கோலிவுட் திரையுலகின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் எஸ்.தமன். தில்லாலங்கடி, காஞ்சனா, மெளனகுரு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, சேட்டை, வாலு, சமீபத்தில் வெளியான 'சிவலிங்கா' உள்பட பல தமிழ் திரைப்படங்களுக்கும், ஏராளமான தெலுங்கு படங்களூக்கும் இவர் இசையமைத்துள்ளார்...

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ ரெய்டு

கடந்த சில மாதங்களாகவே அரசியல் தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர்களின் சோதனை உள்பட பல சோதனைகள் அவ்வப்போது நடந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருவதை பார்த்து வருகிறோம்...

ரஜினிகாந்த் தோல்வி அடைவார்: சுப்பிரமணியன் சுவாமியின் கடுமையான விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றைய ரசிகர்களின் சந்திப்பின்போது, 'கடவுள் இப்போது என்னை நடிகனாக பயன்படுத்தி வருகிறார். நாளை அவர் என்னை அரசியல்வாதியாக பயன்படுத்தினால் உண்மையாக செயல்படுவேன்' என்று தெரிவித்திருந்தார். இந்த பேச்சு அவர் அரசியலுக்கு வருவதை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்த