கொரோனாவால் இருந்து குணமான தம்பதி தற்கொலை: அதிர்ச்சி காரணம்

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் உடல்நலத்தை பாதிப்பதோடு, பெரும்பாலானோர்களுக்கு மன உளைச்சளையும் ஏற்படுத்தி வருகிறது என்பது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமான தம்பதியர் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் அக்கம்பக்கத்தினர் ஒதுக்கிய காரணத்தாலும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அனந்தபூர் என்ற பகுதியை சேர்ந்த வெல்ல வியாபாரி பனிராஜ். இவர் தனது மனைவி சிரிஷா மற்றும் 15 வயது மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பனிராஜ் மற்றும் அவருடைய மனைவி சிரிஷா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. ஏற்கனவே கொரோனாவால் பனிராஜ் தாயார் உயிரிழந்த நிலையில் தம்பதிகள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் ஒருசில நாட்களுக்கு முன்னர் தம்பதிகள் இருவரும் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மீண்டும் தங்களது தொழிலை வழக்கம் போல் செய்ய முயற்சித்த போது அக்கம் பக்கத்தினர் கொரோனாவில் இருந்து மீண்ட இந்த தம்பதியிடம் பேசுவதை தவிர்த்ததாகவும், அவர்களிடமிருந்து வெல்லம் வாங்குவதை நிறுத்தி கொண்டதாகவும் தெரிகிறது.

ஏற்கனவே கடன் தொல்லையால் அவதிப்பட்டு இந்த தம்பதியர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தங்களை ஒதுக்குவதை அறிந்ததும் மனமுடைந்தனர். இதனால் இருவரும் தங்கள் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

பிக்பாஸ் தமிழ் நடிகை வெளியிட்ட ஹாட் வொர்க்-அவுட் வீடியோ

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தங்களது சமூக வலைதளங்களில் ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே

பிச்சையெடுத்து தொழிலதிபரான வாலிபர்: ரூ.1 லட்சம் கொடுக்க விரும்பும் ராகவா லாரன்ஸ்

தினந்தோறும் பிச்சை எடுத்து அதில் கிடைத்த பணத்தை செலவு செய்தது போல மீதமுள்ள பணத்தை சேமித்து வைத்து இன்று டீ விற்பனை செய்யும் தொழில் அதிபராக மாறியிருக்கும் இளைஞர் ஒருவரின் தன்னம்பிக்கையை பாராட்டி

100% கல்வி கட்டணத்தை செலுத்த வலியுறுத்தினால் நடவடிக்கை: மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு

100% கல்வி கட்டணத்தை கட்ட வேண்டும் என மாணவ மாணவிகளின் பெற்றோர்களை வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தனுஷ் ஒரு ரோபோ போன்றவர்: 'ஜகமே தந்திரம்' நடிகை புகழாராம்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில் திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி கொடுத்த உடன் இந்த படம் ரிலீசாகும்

தமிழில் பதிலளித்த சாக்சி: குதூகலத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறுமா? நடைபெறாதா? என்ற கேள்வி எழுந்த நிலையில் சமீபத்தில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்