close
Choose your channels

அற்ப காரணம், தூக்கில் தொங்கிய கணவன் - மனைவி: அனாதையான 2 பெண் குழந்தைகள்!

Friday, December 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காஞ்சிபுரத்தில் அற்ப காரணத்தினால் கணவன் மனைவி ஆகிய இருவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து இந்த தம்பதியின் இரண்டு மகள்கள் அனாதையாக இருப்பது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

காஞ்சிபுரம் அருகே வினாயகபுரம் குப்பம்மாள் என்ற பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வருபவர் கதிர்வேலு. இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும் 8 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்

இந்த நிலையில் அடிக்கடி மணிமேகலை கணவர் மீது சந்தேகப்பட்டு கொண்டு இருந்ததாகவும் இதனால் கணவன் மனைவி இடையே அவ்வப்போது தகராறு வந்ததாகவும் தெரிகிறது. அந்த வகையில் நேற்று இரவும் மணிமேகலை தனது கணவர் மீது சந்தேகப்பட்டு சண்டை போட்டுள்ளார். இதன் பின்னர் நீண்ட நேரம் இரவில் அழுதுகொண்டே தூங்கியதாக தெரிகிறது

இந்த நிலையில் திடீரென நள்ளிரவில் கணவன் எழுந்து பார்த்த போது தனது எதிரில் மனைவி மணிமேகலை தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் போலீஸ் விசாரணைக்கு ஆளாக வேண்டும் என்று பயந்து அவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்

காலையில் குழந்தைகள் இருவரும் விழித்தபோது அப்பா அம்மா இருவரும் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து அழுதனர். குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அற்பதனமான சந்தேக நோயால் கணவன் மனைவி ஆகிய இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் தற்போது இரண்டு பெண் குழந்தைகளும் அனாதையாக உள்ளது அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.