ஒரே புடவையில் தூக்கில் தொங்கிய கணவன் - மனைவி! சென்னையில் பரிதாபம்

  • IndiaGlitz, [Saturday,June 29 2019]

சென்னை அருகே செங்குன்றம் பகுதியில் புடவை ஒன்றில் மனைவி தூக்கில் தொங்கி இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் அதே புடவையில் தூக்கில் தொங்கிய சோக நிகழ்ச்சி அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த 38 வயது மதன் என்பவருக்கு கவுசல்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக மதனுக்கும் கவுசல்யாவுக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் சண்டை வர உடனே மனம் வெறுத்த கவுசல்யா புடவையை மின்விசிறியில் மாட்டி தூக்கில் தொங்கினார். இதை கண்டு கதறியழுத மதன், புடவையின் இன்னொரு பக்கத்தில் தானும் தூக்கில் மரணம் அடைந்தார்

பள்ளி சென்றிருந்த இவர்களின் குழந்தைகள் வீட்டிற்கு வந்தபோது அப்பா, அம்மா இருவரும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் செங்குன்றம் போலீசார் உடனே சம்பவம் இடத்திற்கு வந்து இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் அப்பா, அம்மா இருவரையும் இழந்த அந்த பிஞ்சு குழந்தைகளின் கண்ணீர் அனைவரையும் கலங்க வைத்துள்ளது
 

More News

பிக்பாஸ் மீராமிதுனுக்கு கொலை மிரட்டல்: போலீஸில் புகார்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது பாகம் கடந்த ஞாயிறு தொடங்கிய நிலையில் இரண்டு நாட்கள் கழித்து அதாவது கடந்த செவ்வாய் அன்று 16வது போட்டியாளராக நடிகை மீராமிதுன் பிக்பாஸ் வீட்டில் இணைந்தார்

பிக்பாஸ் நடிகருக்கு பெண் குழந்தை

பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகருமான கணேஷுக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை

அமலாபால் நடித்த 'ஆடை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகை அமலாபால் நடித்த ஆடை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமீபத்தில் வெளிவந்த

இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கு திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

இயக்குனர் ஏ.எல்.விஜய் மற்றும் நடிகை அமலாபால் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இரண்டே வருடங்களில் இருவருக்கும் கருத்துவேறுபாடு

இந்தியாவுக்கு ஆதரவு தர இங்கிலாந்து பறந்த த்ரிஷா-வரலட்சுமி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதில் இந்தியா கலந்து கொள்ளும் போட்டியை நேரில் கண்டு ரசிக்க