close
Choose your channels

வெட்டப்பட்ட மனைவியின் தலையோடு சாலையில் உலா வந்த கணவன்… உறைய வைக்கும் சம்பவம்!

Thursday, February 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஈரான் நாட்டில் இளைஞர் ஒருவர் தன்னுடைய இளம் மனைவியின் தலையை வெட்டியெடுத்துக் கொண்டு சாலையில் நடந்துவந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் கிளப்பி இருக்கிறது.

ஆவாஸ் எனும் நகரில் வசித்துவந்த 18 வயது இளம்பெண் மோனா ஹைதரி. இவருக்கு 12 வயதிலேயே திருமணம் நடைபெற்றிருக்கிறது. தற்போது 3 வயதில் ஒரு குழந்தை இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இவருடைய கணவர் இவர் மீது சந்தேகப்பட்டதோடு கௌரவத்திற்காக கொலையும் செய்திருக்கிறார். இந்தக் கொலைக்கு கணவரின் அண்ணனும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் மோனாவை கொலை செய்த அவருடைய கணவர் தலையை வெட்டியெடுத்துக் கொண்டு சாலையில் நடந்துவந்துள்ளார். இதைப்பார்த்து பதறிப் பார்த்தவர்களுக்கு அவர் புன்னகையோடு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த கோரச் சம்பவம் ஈரான் நாட்டு நாடாளுமன்றத்தில் கடும் விவாதம் ஏற்படுத்தியருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈரான் நாட்டில் நடைபெற்ற இந்த கவுரக்கொலை தற்போது உலக அளவில் பேசுபொருளான நிலையில் சமூகநல ஆர்வலர்கள் ஆண்களின் மனநிலை குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.