close
Choose your channels

மனைவியின் கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்த கணவன்: அதன்பின் நடந்த விபரீதம்

Saturday, January 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை அனகாபுத்தூர் பகுதியை பகுதியில் மனைவியின் கள்ளக்காதலனை தந்திரமாக வீட்டுக்கு வரவழைத்து கணவன், மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மனைவி மாதேஸ்வரிக்கு கார்த்திகேயன் என்பவருடன் நட்பு ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் இந்த நட்பு கள்ளக்காதலாக மாறியதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் மாதேஸ்வரியை ஆபாச நிலையில் வீடியோ எடுத்த கார்த்திகேயன் அடிக்கடி அவரை மிரட்டி பணம் பறித்தல், பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து கணவரிடம் உண்மையை கூறிய மாதேஸ்வரி, கார்த்திகேயன் தனக்கு தொல்லை கொடுப்பதையும் கூறியுள்ளார். இதனை அடுத்து கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கார்த்திகேயனை கொலை செய்ய திட்டமிட்டனர். இதனால் தந்திரமாக கார்த்திகேயனை வீட்டுக்கு வரவழைத்தனர். கார்த்திகேயன் வீட்டின் உள்ளே நுழைந்ததும் மறைந்திருந்து மண்வெட்டியால் அடித்து கார்த்திகேயனை சிவகுமார் கொலை செய்தார். பின்னர் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கார்த்திகேயன் உடலை அவர்கள் வீட்டிற்கு பின்னால் புதைத்து விட்டனர்.

இந்த நிலையில் கார்த்திகேயனை காணவில்லை என அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுக்க, போலீசார் விசாரணையில் அவர் மாதேஸ்வரியுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மாதேஸ்வரி மற்றும் அவரது கணவர் சிவகுமாரிடம் போலீசார் விசாரணை செய்தபோது இருவரும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதன்பின்னர் இருவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.