close
Choose your channels

அக்காவுக்கு பாலியல் தொல்லை: ஆணுறுப்பை சிதைத்த மச்சான்; திடுக்கிடும் தகவல்

Tuesday, August 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் திருமங்கலம் பகுதியில் கணவரை அவரது மனைவியே கொலை செய்த சம்பவம் குறித்த செய்தியைப் பார்த்தோம். குடிபோதையில் இருந்த கணவர் சுதீஷ், கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டதாக முதலில் நாடகமாடிய மனைவி அருள்செல்வி அதன்பின் போலீஸ் விசாரணையில் பாலியல் டார்ச்சர் தாங்க முடியாமல் கணவரை கொலை செய்ததாக கூறினார்.

இந்த நிலையில் அருள்செல்வியை போலீசார் கைது செய்து விசாரணை செய்த நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த கணவர் இயற்கைக்கு மாறான உறவு முறைக்கு அழைத்ததாகவும், இதனால்தான் ஆத்திரமடைந்து கணவருக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு அதன்பின்னர் அவர் மயங்கியதும் தனது சித்தி மற்றும் சித்தி மகனை வரவழைத்து கணவரின் முகத்தை பாலித்தீன் கவரால் மூடி அடித்துக் கொலை செய்ததாகவும் கூறினார்.

அதேபோல் அக்காவுக்கு பாலியல் தொல்லை தந்த செய்தியை கேட்டது ஆத்திரமடைந்த அருள்செல்வியின் சகோதரர் மச்சானின் ஆணுறுப்பை அடித்து துவம்சம் செய்துள்ளார். இதுதான் சுதிஷை பிரேத பரிசோதனை டாக்டர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கட்டிலிலிருந்து கீழே விழுந்தால் இந்த அளவுக்கு ஆணுறுப்பு அடிபட வாய்ப்பு இல்லையே என்ற சந்தேகத்தால் பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அருள்செல்வியும் அவருடைய குடும்பத்தினர்களும் சேர்ந்து சுதீஷை அடித்து கொலை செய்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து அருள்செல்வியுடன் அவரது சித்தியும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.