close
Choose your channels

45 வயது பெண்ணுடன் 28 வயது இளைஞர் கள்ளக்காதல்: இருவரையும் வெட்டிக்கொன்ற கணவர்

Monday, February 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

45 வயது பெண்ணும் 28 வயது இளைஞரும் கள்ளக்காதலில் ஈடுபட்டு இர்ந்த நிலையில் அந்த பெண்ணின் 58 வயது கணவர் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தூத்துக்குடி அருகே சண்முகம் என்ற 58 வயது நபருக்கு மாரியம்மாள் என்ற 45 வயது மனைவி உள்ளார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மாரியம்மாவுக்கும் அவரது எதிர் வீட்டைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதனை கண்டுபிடித்த சண்முகம், தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டதாக தெரிகிறது

ராமமூர்த்திக்கு உள்ளூரில் நல்ல பெயர் இருந்ததால் இவர் கள்ளக்காதல் இருப்பதாகச் சொன்னதை ஊர்க்காரர்கள் யாரும் நம்பவில்லை. இந்த நிலையில் விலையுயர்ந்த 3 செல்போன்கள் வாங்கி வந்து வீட்டில் ஒரு சில இடங்களில் மறைத்து வைத்து கையும் களவுமாக கள்ள காதலை பிடிக்க சண்முகம் முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து அந்த செல்போனில் ராமமூர்த்தி வீட்டுக்குள் வருவதும் கள்ளக்காதலில் ஈடுபடுவதும் இருவரும் ஆபாசமாக இருப்பதையும் படம்பிடித்தார்

இந்த நிலையில் நேற்றிரவு கணவர் வீட்டில் இருக்கும்போதே ராமமூர்த்தி அவருடைய வீட்டுக்கு வந்துள்ளார். ராமமூர்த்தி, மாரியம்மாள் ஆகிய இருவரும் உல்லாசமாக இருந்தபோது ஏற்பட்ட முனகல் சத்தத்தால் கண்விழித்த சண்முகம், தன் கண்முன்னே நடந்த அசிங்கத்தை பார்த்து ஆத்திரமடைந்து இருவரையும் அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு போலீசிலும் சரண் அடைந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.