close
Choose your channels

62 முதியவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட இளம் மனைவி: உயிரோடு எரித்துக் கொளுத்திய கணவர்

Thursday, June 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் 62 முதியவர் ஒருவருடன் தனது இளம் மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் கள்ளக்காதலனையும், மனைவியையும் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்வேல் முருகன் என்பவருக்கு லட்சுமி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் லட்சுமிக்கு தனது வீட்டின் அருகில் உள்ள 62 வயது முதியவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியதாகவும் தெரிகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்த நிலையில் இதுகுறித்து கேள்விப்பட்ட செந்தில் வெல்முருகன் தன் மனைவியை கண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இது சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவர் மற்றும் குழந்தையை விட்டுவிட்டு கள்ளக்காதலன் வீட்டிற்கு லட்சுமி சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில் வேல்முருகன் தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்தார். ஆனால் அவருடைய மனைவியோ கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை பெட்ரோல் எடுத்துக் கொண்டு மனைவியின் கள்ளக்காதலன் வீட்டுக்கு சென்ற செந்தில் வெல்முருகன், கள்ளக்காதலன் மற்றும் மனைவி லட்சுமி ஆகிய இருவர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இதில் படுகாயம் அடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும், கள்ளக்காதலர் மட்டும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் செந்தில் வேல்முருகனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தாயார் இறந்த நிலையில் தந்தையும் சிறைக்கு சென்றுவிட்டதால் தற்போது அவர்களுடைய மகள் அனாதையாக இருப்பது அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.