close
Choose your channels

10 ஆயிரம் ரூபாய்க்கு பாம்பு வாங்கி மனைவியை கொலை செய்த கணவன்

Monday, May 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

10 ஆயிரம் ரூபாய்க்கு பாம்பு வாங்கி மனைவியை கொலை செய்த கணவனால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கேரளாவில் கொல்லம் பகுதியை சேர்ந்த சூரஜ் என்பவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உத்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் உத்ராவின் நகைகளை ஊதாரித்தனமாக சூரஜ் செலவு செய்து வந்ததாகவும் மேலும் பணம் நகை பெற்றோரிடம் போய் வாங்கிக் கொண்டு வருமாறு மனைவியை சூரஜ் வற்புறுத்தியதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் திடீரென உத்ரா பாம்பு கடித்து இறந்து விட்டார். இதுகுறித்து உத்ராவின் அம்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டது. அப்போது சூரஜ் தான் பத்தாயிரம் ரூபாய்க்கு பாம்பை வாங்கி ஒரு பையில் போட்டு வீட்டுக்கு வந்ததாகவும், 12 மணி வரை உத்ராவிடம் ஜாலியாக பேசிக் கொண்டிருந்து விட்டு அதன் பின்னர் உத்ரா தூங்கியவுடன் பாம்பை பையிலிருந்து எடுத்து போட்டுவிட்டு வெளியே சென்று விட்டதாகவும் தெரிகிறது. அதன் பின்னர்தான் பாம்பு உத்ராவை கடித்ததாகவும், இதனால் விஷம் ஏறி உத்ரா மரணமடைந்து விட்டதாகவும் தெரிகிறது

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஏற்கனவே ஒருமுறை சூரஜ், தனது மனைவியை பாம்பால் கொல்ல முயற்சி செய்ததாகவும் ஆனால் அந்த முயற்சியில் உத்ரா உயிர் தப்பி விட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சூரஜை கைது செய்த போலீசார் அவருக்கு பாம்பு கொடுத்த பாம்பாட்டி நண்பரையும் கைது செய்துள்ளனர். கட்டிய மனைவியை கொலை செய்ய 10 ஆயிரம் ரூபாய்க்கு பாம்பு வாங்கிய கணவனால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.